This site contains copyrighted material
the use of which has not always been specifically
authorized by the copyright owner. We are making such material available in
our efforts to advance understanding of issues of Political,Economical, Social,Cultural,Environ-mental and humanitarian significance. To
debate understand,and fight to progrees our world forward.We believe this constitutes a
'fair use' of any such copyrighted material as provided for in
section 107 of the US Copyright Law. In accordance with
Title 17 U.S.C. Section 107, the material on
this site is distributed without profit to those who have
expressed a prior interest in receiving the included information for research and educational purposes
of their National and social
problemes.
If you wish to use copyrighted material from this site for purposes of
your own that go beyond 'fair use', you must obtain permission from the
copyright owner.
ENB
Last updated 22/06/2007 14:54:02 +0100
''சமாதான வழிமுறை ஒன்றினூடாக அமைதி
வழியில் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று ஐந்து ஆண்டுகள் நாம் பொறுமையுடன்
கடைப்பிடித்து வந்த சமாதான முன்னெடுப்புகளை இன்று ஷ்ரீலங்காவின் அரச
பயங்கரவாதம் விழுங்கி ஏப்பமிட்டு நிற்கின்றது. அதன் சுவடுகள் தமிழ் மக்களின்
குருதி கொண்டே கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன.''
தமிழ்ச்செல்வன்
உலக அரங்கில் எழுந்துவரும் உரிமைக்குரல் எமக்கு தெம்பையும் திடத்தையும்
கொடுக்கிறது
[14 - June - 2007]
தேசத்தின் விடுதலைக்காக உலக அரங்கில் எழுந்து
வரும் உரிமைக் குரல் தமிழ் மக்களுக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து
வருவதாக விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன்
தெரிவித்துள்ளார். சுவிஸில் திங்கட்கிழமை இடம்பெற்ற `வெல்க தமிழ்' பேரணிக்கு
அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும்
கூறியதாவது;
"தேச விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கும் தேசப்பற்றானது
காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஆட்கொண்டு
நிற்கும் ஒரு அபூர்வமான சக்தி" என்ற எமது தலைவரின் எண்ணத்திற்கு செயல் வடிவம்
கொடுப்பதுபோல தாயக தேசத்தின் மீதான பற்றுதலை மனதிலே தாங்கிக்கொண்டு அதனது
விடிவிற்காக அயராது உழைக்கின்ற எம் உறவுகளுக்கு வணக்கங்கள். `வெல்க தமிழ்'
என்னும் எழுச்சிப் பேரணியில் பங்குகொண்டு தாயக பாசத்துடன் தேசத்தின்
விடுதலைக்காக, உலக அரங்கில் நீங்கள் எழுப்பிவரும் உரிமைக்குரல் ஒடுக்கப்பட்டு
வரும் எமது மக்களிற்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கின்றது. எமது
தலைமைக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த
உலகத்தில் நாம் தனித்து நிற்கவில்லை என்ற தன்னம்பிக்கையையும் எமக்குத்
தருகின்றது.
உலகிலேயே எந்த இனத்திற்குமில்லாத எந்த இனமுமே சம்பாதித்திராத அரும்பெரும்
சொத்தாகிய உங்களின் பேராதரவும், தீராத விடுதலை முனைப்புமே இன்று தாயகத்தில்
பெரும் வெற்றிகளை குவித்து தமிழினத்தை வீறுநடைபோட வைத்திருக்கின்றது என்பதனை
யாருமே மறுத்துவிட முடியாது. தாயகத்திலிருந்து வெகு தொலைவு சென்ற துயரம் மனதை
அடைக்கின்றபோதும் தாங்க முடியாத கலாசார பண்பாட்டுச் சுமைகளை ஒரு தோளிலும்,
தாயகத்தின் உறவுகளின் வாழ்வாதாரத்தை மறு தோளிலுமாகச் சுமந்துகொண்டு மண்ணின்
விடுதலை நோக்கி உங்களது தார்மீக ஆதரவை நல்கும் அரும்பணி காலத்தால் நினைவு
கூரப்படும். தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோதெல்லாம்
பொங்கியெழுந்து உலக மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டி நியாயம் கேட்கும் உங்கள்
தாயகப் பற்றை மெச்சுகின்றோம்.
சமாதான வழிமுறை ஒன்றினூடாக அமைதி வழியில் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று
ஐந்து ஆண்டுகள் நாம் பொறுமையுடன் கடைப்பிடித்து வந்த சமாதான முன்னெடுப்புகளை
இன்று ஷ்ரீலங்காவின் அரச பயங்கரவாதம் விழுங்கி ஏப்பமிட்டு நிற்கின்றது. அதன்
சுவடுகள் தமிழ் மக்களின் குருதி கொண்டே கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன.
பயங்கரவாத அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான போர் தமிழ் மக்கள் வாழ்வில்
சொல்லொணாத் துயரங்களை விதைத்துவிட்டது.
தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், எறிகணை வீச்சுகள், விமானக்
குண்டு வீச்சுகள் என்பவற்றால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள்,
குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடின்றிக் கொல்லப்பட்டார்கள். பல
இலட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து இன்றும் அகதி
முகாம்களில் ஒருவேளை உணவுகூட கிடைக்காதா என ஏங்கித் தவிக்கின்றார்கள்.
எமது மக்களின் இத்தகைய அவல நிலைகளைப் போக்க நாமும் ஓர் தற்காப்பு யுத்தத்தில்
ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டோம். எமது பதில் நடவடிக்கைகள் மூலம் மக்களை
ஆக்கிரமிக்க முயலும் இராணுவத்தைத் தடுத்து நிறுத்தவும் அவர்களின் இராணுவ
வலிமையை சிதறடிக்கவும் தொடங்கினோம். இந்த நிலையில் எமது பலமான எதிர்த்
தாக்குதல்களினால் எதிரிகள் பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள்.
இராணுவ முன்னரங்குகளில் ஏற்பட்ட பாரிய தோல்விகளும், எமது தந்திரோபாயத்
தாக்குதல்களினால் ஏற்பட்ட பாரிய பொருளாதார அழிவுகளும் ஷ்ரீலங்கா அரசினை
ஆட்டங்காண வைத்தது. இதனால் செய்வதறியாது திகைத்த ஆளும் வர்க்கம் தமிழ்
மக்களின் தேச மீட்பு நோக்கிய முன்னெடுப்புகளை முறியடிப்பதற்காக சர்வதேச அளவில்
எமது போராட்டத்தை நசுக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியது.
அரசு எமது விடுதலைப் போராட்ட அமைப்பிற்கு பயங்கரவாத முத்திரை குத்தி அதன்
வாயிலாக சர்வதேச நாடுகளின் உதவியினை எமக்கெதிராக ஒன்றுதிரட்டி எம்மை
அழித்துவிடலாம் எனக் கனவு காண்கிறது. அத்துடன் தமிழ் மக்களை இலங்கைத்
தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் நோக்கிலான இனச் சுத்திகரிப்பு
நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டது. இதன் ஒரு கட்டமே அண்மையில் கொழும்பிலிருந்து
தமிழர்களைத் துரத்திய நிகழ்வு. அத்துடன் அரச படைகள் நாளுக்கு நாள் தமிழ்
மக்களை படுகொலை செய்து தெருக்களிலும் ஆறுகளிலும் வீசி வருகின்றன.
இவையனைத்தையும் பார்த்துக்கொண்டும் சர்வதேச சமூகம் மௌனித்திருக்கின்றது.
தனியரசை நிறுவும் பயணத்தை வேகமாக முன்னெடுப்போம் என உறுதி எடுத்துக்கொண்ட எமது
தேசியத் தலைமையும், போராளிகளும் மக்களும் தாயகத்திலே என்றைக்குமே இல்லாதவாறு
ஒன்றுதிரண்டு நிற்கின்றனர். எதிரியின் இராணுவ முனைப்புகளை முறியடித்து அவர்களை
எமது தாயகத்திலிருந்து முற்றாக வெளியேற்றி விடுவது என்பதில் உறுதியாக
இருக்கின்றனர். அதற்கான தந்திரோபாயங்களை வகுத்து தக்க நேரத்தில் நகர்வுகளை
மேற்கொள்ளவல்ல தலைமையும், தரை- கடல்- வான் என எங்கும் எதையும் செய்து
முடிக்கும் வல்லமை கொண்ட அர்ப்பணிப்பு மிக்க முப்படையையும் கொண்ட தமிழர் படையை
எந்த ஆக்கிரமிப்பு சக்திகளாலும் அழித்துவிடமுடியாது. சர்வதேச அளவில் இத்தகைய
போரினை எதிர்கொள்வதற்கு உங்களது அயராத உழைப்பும் தாயகம் மீதான நேசிப்புமே
அவசியமாகும். தமிழர் பரந்து வாழும் நாடுகள் எங்கிலுமாக எமது எதிர்கால
சந்ததிக்கு போராட்டத்தின் தேவை பற்றியும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும்
இன்றைய நிலை தொடர்பாகவும் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஒவ்வொரு
தமிழ் பிரஜைகளும் செயற்படவேண்டும். எதிரி எமக்கெதிராக அந்தந்த நாடுகளில்
முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எமது ஒட்டுமொத்த ஜனநாயக பலத்தையும் கொண்டு
எதிர்த்து முறியடிப்போம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.
உலகின் எந்தப் பகுதியில் எந்தச் சூழலில் எந்தத் தகுதியுடன் நீங்கள்
வாழ்ந்தாலும், தமிழீழத்தில்தான் அந்த தாயக பூமியில்தான் உங்களது வேர்
ஆழப்புதைந்து கிடக்கின்றது. இந்த மண்ணில்தான் உங்களது இனத்தனித்துவத்தின்
அடையாளம் பதிந்து கிடக்கின்றது. இந்த மண் உங்களது இரத்தத்தோடும் ஆன்மாவோடும்
உங்களது வரலாற்றோடும் ஒன்று கலந்து கிடக்கின்றது என்கிறார் எமது தலைவர்.
இத்தாயக தேசம் எதிரியின் ஆதிக்கப்பிடிக்குள் சிக்கி அழிந்து போகாது
பாதுகாப்பதில் உங்களுக்கும் உயரிய பொறுப்பிருக்கின்றது. உலகத் தமிழரின்
ஒருமித்த குரலும் உறுதியான முன்னெடுப்புகளுமே எமது வெற்றிக்கு வழிவகுக்கும்.
எமக்குச் சிறந்த உதாரணமாக உலகிலேயே தமக்கென்று ஓரடி நிலம் கூட இல்லாது
அடிமைப்படுத்தப்பட்டு கொன்றழிக்கப்பட இருந்த யூதர்களை எடுத்துக்கொள்ளலாம்.
பெரும் இன அழிப்புக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீண்டு சர்வதேச நாடுகள்
பலவற்றின் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் போராடத்
தொடங்கினர். அவர்கள் உறுதியோடு போராடினார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும்
அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்த போதெல்லாம்
அவர்கள் தேசம் மீதான நம்பிக்கை இன்னும் இன்னும் அதிகரித்தது. வரித்துக் கொண்ட
இலட்சியத்தில் அவர்களுக்கு இருந்த பற்றும் தாயகம் மீதான அவர்களது கனவுமே
இறுதியில் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது
எவருமே தீண்டுவாரற்று இருந்த ஓர் இனம் இன்று எவராலுமே சீண்ட முடியாத அளவிற்கு
தன்னை வளர்த்து நிற்கிறது.
இதுபோலவே தமிழினமும் மாற்றார் எவரின் உதவியுமின்றிப் போராடி தமது தாயகத்தை
மீட்கும் அளவிற்கு எமது பலத்தையும் வளத்தையும் நுட்பமாகப் பயன்படுத்தி எமது
பலம் சிதைந்து போகாமல் சாதுரியமாகப் போரிட்டு எதிரிக்குப் பெரும் சவாலாக
எழுந்து நிற்கின்றது. எமது சொந்தத் தாயகத்திலேயே அடக்கப்பட்டு உரிமைகள்
பறிக்கப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டவர்கள் நாங்கள். ஆனால், அந்த வரலாற்றை
மறந்து அந்நியரிடம் மண்டியிட்டு வாழாது விடுதலைப் போர் ஒன்றை முன்னெடுத்து
அதனை முப்படைப் பலம் கொண்ட பெரும் மரபு வழி இராணுவமாக கட்டிவளர்த்து அதன்
மூலமாக இழந்த நிலங்களை மீட்டு அங்கு நடைமுறை அரசொன்றை செயற்படுத்தும் அளவிற்கு
நாம் வந்துவிட்டோம். எமது தாயகத்தில் விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்
இந்நிலையில் நாம் சர்வதேச அளவில் எதிர்கொண்டு நிற்கும் பிரசாரப் போரினையும்
முறியடிக்க நம்பிக்கையோடு இருக்கவேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அவர்களின் தாயகத்தை மீட்பதற்கும் அங்கு
எவரது தலையீடும் இன்றி சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும்
வாழ்வதற்கும் ஆனதே. தவிர வேறு எந்தத் தேசியத்தவரையும் இடையூறு செய்வதையோ
அவர்களைக் கோபமூட்டுவதையோ நாம் முற்றாக வெறுக்கின்றோம். இலங்கை அரசு
புலம்பெயர் நாடுகளில் புதிதான பல சட்டங்களின் மூலம் எமது நடவடிக்கைகளை
முறியடிக்கும் சதியினை முன்னெடுத்து வருகின்றது. நாம் எமது ஒருங்கிணைந்த
ஆதரவையும் எமது தேசத்திற்கான வேண்டுதலையும் வெளிப்படுத்துவதற்கு யாரையும்
குறுக்கிடத் தேவையில்லை. சர்வதேச அளவில் எமது எதிரியை எதிர்கொள்ள நாம் ஜனநாயக
ரீதியிலான முன்னெடுப்புகளையே முன்னெடுத்து வருகின்றோம். அத்தகைய
முயற்சிகளுக்கு எந்த ஜனநாயக நாடும் முட்டுக்கட்டை போட இயலாது.
எமது மக்கள் தாயகத்தில் அனுபவிக்கும் பெரும் மனித அவலங்களை சர்வதேசம் எங்கும்
வெளிப்படுத்துவோம். இலங்கை அரசின் அரச பயங்கரவாதத்தையும் அதன் உண்மைக்கு
மாறான பிரசாரத்தையும் முறியடித்து எமது விடுதலையை மிக விரைவில்
வென்றெடுப்பதற்காக எமது தலைவரின் கீழ் ஒன்றாக அணிதிரள்வோம்.
SLFP,தீர்வுத்திட்டம் இதர சமூக வர்க்கங்களின் நிலைப்பாடு
TNA:
ஆளும் கட்சியின் தீர்வு யோசனைதொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது!அடியோடு
நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
கொழும்பு, மே 2
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை
சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின்
ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க
மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த்
தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது.இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து
வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்
சுரேஷ் பிரேமச்சந்திரன்.தனது இராணுவ இலக்கை அடைவதற்கான அவகாசத்தைப்
பெற்றுக்கொள்வதற்காக நீண்ட காலத்தைக் கடத்திய பிறகு, ஜனாதிபதி மஹிந்தவின்
கட்சி முன்வைத்திருக்கும் இந்தத் தீர்வு யோசனை இந்தியாவையும் சர்வதேச
சமூகத்தையும் ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கையே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன்
குற்றஞ்சாட்டியிருக்கிறார்.இனப்பிரச்சினைக்கான தனது தீர்வு யோசனையை ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி நேற்றுமுன்தினம் நடத்திய தனது மேதினப் பொதுக்கூட்டத்தில்
வெளியிட்டிருக்கிறது. மாவட்ட மட்டத்தில் மாத்திரமே அதிகாரங்களைப் பகிரும்
திட்டத்தை உள்ளடக்கிய அந்த யோசனை தமிழர் தரப்புக ளில் பலத்த ஏமாற்றத்தை
ஏற்படுத்தியி ருக்கிறது. அர்த்தமற்ற யோசனைஇது குறித்து கருத்து தெரிவித்த
சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தவையாவது:தமிழ் மக்களின் விடுதலைப்
போராட்டம் தீவிரம் பெற்றுப் பல திருப்புமுனைகளைத் தாண்டி இன்று முக்கியமான
காலகட்டத்தில் நிற்கின்றது. சுயநிர்ணய உரிமைக்கான இந்தப் போராட்டம் உலகின்
மனச்சாட்சியை தொட்டு நிற்கின்றது. இந்த சமயத்தில் சர்வதேச சமுகத்தையும், அயல்
நாடான இந்தியாவையும் சமாளிப்தற்கான ஒரு திட்டமாக அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை
மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக் கிறது. மாவட்ட
மட்டத்தில் அதிகாரங்களைப் பகிரும் அர்த்தமில்லாத யோசனை அது. மாவட்டசபைகள்,
கிராம சபைகள் என்பவற்றை என்றைக்கோ தமிழர்கள் நிராகரித்து ஒதுக்கிவிட்டனர்.
அர்த்தமில்லாத இந்த மாவட்ட மட்ட அதிகாரப் பகிர்வை தமிழர்களுக்கு உரிமை
வழங்குவதற்கான தீர்வாக அக்கட்சி இப்போது முன்வைத் திருக்கிறது. தமிழ்
மக்களுக்கு இதன் மூலம் பலத்த ஏமாற்றத்தை அரசு தந்திருக்கிறது. இந்த யோசனைத்
திட்டம் பரிசீலனைக்கு எடுப்பதற்குக்கூட தகுதியற்றது;அருகதை யற்றது. தமிழ்
மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைப்
பரிசீலனைக்குக்கூட எடுக்கவே எடுக்காது.இப்போது சர்வதேச சமூகம் ஒரு தெளிவான
நிலைக்கு வரமுடியும். ஐக்கிய இலங் கைக்குள் தமிழர்களோடு கூடி வாழ்வதற்கு
சிங்கள ஆளும் வர்க்கம் தயாராக இல்லை என்பதே தகுதியற்ற இந்த அதிகாரப்பரவலாக்கல்
யோசனை மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற யதார்த்தம்.இலங்கைப் பிரச்சினையில்
இனிமேலõ வது சர்வதேச சமூகமும் இந்தியாவும் சரி யான கணிப்பை செய்து தமிழ்
மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய நீதியான தீர்வு ஒன்றை
பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும். இத னையே தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சங்கரி சித்தார்த்தன் பத்மநாபா
அணி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள்தமிழர் போராட்டத்தை ஆரம்ப
நிலைக்குத் தள்ளியுள்ளன
சங்கரி சித்தார்த்தன் பத்மநாபா அணி கருத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
முன் மொழிவுகள் தமிழ் மக்களின் 50 வருட காலப் போராட்டத்தை மீண்டும் தொடங் கிய
இடத்திற்கே தள்ளியுள்ளன.மூன்று தமிழ் கட்சிகள் மேற்கண்ட வாறு
தெரிவித்துள்ளன.தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டாக அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளன.அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதா வது:ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியினால் இனப் பிரச்சினை தீர்வுக்காக வெளியிடப் பட்டிருக்கின்ற
ஆலோசனைகள் எவ் விதத்திலும் தமிழ் பேசும் மக்களினுடைய அபிலாசைகளை
அண்மிக்கவில்லை என் பதால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் இப்
பிரேரணைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை தெட்டத்தெளிவாக கூறிக்கொள்கின்
றன.இந்த பிரேரணைகள் இனப்பிரச்சினைக் கான தீர்வை எட்டமுடியாதவை என்பது
மாத்திரமல்லாது சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தடையாகவே இருக்கும்.தமிழ்
மக்கள் ஏற்கமாட்டார்கள்மேலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்மாதிரியாக
இருக்க வேண்டிய ஆளுங்கட்சிப் பிரேரணைகள் ஏனைய கட்சிகளின் பிரேரணைகளைக்கூட பின்
தள்ளிவிடும் வகையில் அமைந்துள்ளன. இன்று நடைமுறையில் இருக்கும் 13 ஆவது
அரசியல் திருத்தச் சட்டத் தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங் கப்பட்டிருக்கும்
அதிகாரங்களை காட்டி லும் மிகக் குறைவான அதிகாரங்களையே இப்பிரேரணைகள்
கொண்டிருக்கின்றன.இம் முன்மொழிவுகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான 50 வருட
காலப் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய இடத்திற்கே தள்ளியுள்ளது.பாரிய
அழிவுகளுக்குப் பின்னரும் 50 ஆண்டுகளாக ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காணப்பட
முடியாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டிக்கு குறைவான எத்தகைய தீர்வையும் தமிழ்
மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் என்றுள்ளது
மேலக மக்கள் முன்னணி
சு.க. தீர்வு யோசனைஓர்
அரசியல் மோசடி
மேலக மக்கள் முன்னணி சாடுகிறது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள தீர்வு யோசனைத் திட்டம்
ஓர் அரசியல் மோசடி என்று மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில்
மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:1980களில் தமிழ்த் தேசியப் போராட்டம் தீவிர நிலையை
அடைவதற்கு முன்னரே முன்வைக்கப்பட்டு அன்றைய சூழ்நிலையிலே தோல்வியைத் தழுவிய
ஒரு திட்டத்தை இன்று மீண்டும் ஆளும்கட்சி அறிவித்துள்ளது. 80களின் பின்னர்
நடைபெற்றுள்ள பாரிய போராட்டம், இழப்புகள், சர்வதேச அவதானம், இடைக்காலத்தில்
தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் காணப்பட்டுள்ள கொள்கை இணக்கப்பாடுகள்
ஆகிய எவற்றையுமே பொருட்படுத்தாமல் இந்தத் தீர்வுத்திட்ட ஆலோசனைகள்
முன்வைக்கப்பட்டுள்ளன.இலங்கை நாட்டின் இறைமையையும், ஆட்சி உரிமையையும்
தமிழர்களுடன் சமமாகப் பகிர்ந்துகொள்ள முடியாது என்ற பழைமைவாய்ந்த சிங்கள
பௌத்த பேரினவாதக் கொள்கையையே இந்த யோசனைகள் மூலம் ஆளும்கட்சி
வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசிய தரப்பினரையும், தமிழ் பேசும் முஸ்லிம்
தரப்பினரையும், மலையக மக்களையும் ஏமாற்றி தொடர்ந்து சிங்கள பௌத்த அடிப்படைவாத
கொள்கையை முன்னெடுப்பது இங்கு உள்நோக்கம் ஆகியுள்ளது. தமிழ்த் தேசியத்தை
திருப்திப்படுத்து முன் அரசசார்பு, பங்காளி தமிழ் கட்சிகளைக்கூட இந்த யோசனை
திருப்திப்படுத்திவிட முடியாது. அதுமட்டும் அல்லாமல் இலங்கை இனப்பிரச்சினைக்கு
சமஷ்டி முறைமையே உரிய தீர்வு என அன்றே தொலைநோக்கு பார்வையுடன் கூறிய
சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகர் பண்டார நாயக்கவையும் அவமானப்படுத்தும் விதத்தில்
இந்த யோசனைகள் அமைந்துள்ளன.இத்தகைய அரசியல் மோசடி தீர்வு யோசனைகள் இணைந்து
வாழவேண்டும் என்று எண்ணும் தமிழர்களையும் கூட பிரிவினையை நோக்கியே
தள்ளுகின்றது. எனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை.
இத்தகைய அரசியல் மோசடிக்கு துணைபோகும் நிலையிலும் நாம் இல்லை. என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஷ்லிம் கட்சி
அரசின் யோசனையாக
வெளிவந்தால்மட்டுமே பரிசீலனை செய்ய முடியும்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை அரசின் யோசனை அல்ல. அரசின்
யோசனையாக வெளிவந்தால் மட்டுமே ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி அதனைக் கருத்தில்
கொள்ளும் என்று அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
கூறினார்.பத்திரிகைகளின் விமர்சனத்திற்கு உரிய விடயமாக மட்டும் இல்லாமல்
சர்வதேச சமூகமும் இந்த யோசனை குறித்து தங்கள் கருத்துகளை முன்வைக்கும் போது,
மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்படும்.இந்த யோசனை குறித்து எடுத்த
எடுப்பில் தீர்மானம் ஒன்றுக்கு வந்துவிடாமல், இது அரசில் அங்கம் வகிக்கின்ற
பிரதான கட்சியின் யோசனை மட்டுமே என்ற நிலையிலேயே அணுக வேண்டும்.இந்த யோசனை
அரசாங்கத்தினது யோசனையாக அமைவதாக இருக்க வேண்டுமெனில் முஸ்லிம் காங்கிரஸும்
ஆதரிக்கின்ற ஒன்றாக வந்தால் அன்றி, அரசில் அங்கம் வகிக்கின்ற ஏனைய
சிறுபான்மைக் கட்சிகளின் அங்கீகாரம் பெற்றதாக வெளிப்பட்டால் அன்றி, அரசின்
யோசனை என்று எவரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார் அவர்.
JVP
புலிகளின் வான் பலத்தை
அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கம் தற்போது தேவையா?
கேள்வி எழுப்புகிறது ஜே.வி.பி. ப. பன்னீர்செல்வம்
விடுதலைப் புலிகள் தமது இறுதி துருப்புச் சீட்டான விமானத் தாக்குதல்களை
நடத்திக் கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்கி பொருளாதாரத்தை சீர்குலைத்துக்
கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் புலிகளின் விமானங்களை அழித்தொழிக்காது
அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. இது தேவையா? எனக்
கேள்வியெழுப்பும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான
விமல் வீரவன்ச அரசாங்கத்தின் இந்த யோசனைகளை ஜே.வி.பி. எதிர்க்கின்றது.
ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதென்றும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்ற ஜே.வி.பி.
யின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத்
தெரிவித்தார்.
ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட
யோசனைகளை அரசாங்கத்தினது யோசனைகளாகவே நாம் கருதுகிறோம். கூட்டணி ஆட்சியில்
அக்கட்சியே பிரதானமாக உள்ளது. அன்று செனட் சபை முறைமையை எதிர்த்த சுதந்திரக்
கட்சி அதனை இன்று தீர்வாக முன்வைத்துள்ளது.
புதிய யோசனைகள் மாகாண சபையையும் மீறிய அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகளை
உருவாக்கும். அத்தோடு, பிரிவினைக்கும் வித்திடும். தமிழ் மக்களின்
பிரச்சினைக்கு தீர்வென்ற இந்த யோசனைகள் உண்மையில் பிரிவினைவாதத்தை
ஊக்குவிக்கும் மேற்குலக நாடுகளை சந்தோஷப்படுத்துவதற்காகவே
முன்வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியில் சபைகள், கிராம இராஜ்ஜியங்கள், செனட் சபைகள் இவையனைத்தும்
இனத்துவ ரீதியில் பிரிவினைகளை உருவாக்கும். அத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி
முறைமைக்கு பதிலாக பிரதமர். எனவே, வேறுபாடு கிடையாது. இலங்கையைப் போன்ற சிறிய
நாட்டில் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கி ஜனாதிபதி உலக சாதனையை
படைக்க முயல்கிறார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு
முன்வைக்கப்படும். இந்தக் குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்
பிரதிநிதிகளே உள்ளனர். ஐ.தே.க. விலிருந்து பிரிந்து வந்த 18 பேரும்
இருக்கின்றனர். இக்குழுவில் இருக்கும் தொண்டமானும் ஹக்கீமும் தத்தமது
பிரதேசங்களுக்கு தனி அலகுகள் வேண்டுமென்றும் வேறும் பல யோசனைகளையும்
முன்வைப்பார்கள். அதனையும் ஜனாதிபதி இணைத்துக் கொள்வார்.
இறுதியில், நாடு இனத்துவ ரீதியில் பிரிக்கப்படும். இதற்கு சர்வகட்சிகளும்
ஏற்றுக்கொண்ட யோசனைகளென ஜனாதிபதி நழுவிவிடுவார்.
புலிகள் வான் மூலம் பேயாட்டம் ஆடுகிறார்கள். அதனை அழித்தொழிக்காது அதிகாரப்
பரவலாக்கல் யோசனைகளை அரசு முன்வைக்கிறது. தமிழ் மக்கள் இது போன்ற தீர்வைக்
கேட்டார்களா? அவர்களுக்கு யோசிப்பதற்கே அவகாசம் இல்லாமல் இருக்கின்றது. எனவே,
முதலில் அவர்களுக்கு ஜனநாயகத்தை வழங்க வேண்டும். எனவே, சர்வதேசத்தை
மகிழ்விப்பதற்காகவே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடக்கில் புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றுவோம் எனக் கூறிக்கொண்டு இதுபோன்ற
யோசனைகளை முன்வைப்பதால் பிரிவினைவாதத்தை தோல்வியடையச் செய்ய முடியாது. புலிகளை
தோல்வியடையச் செய்ய வேண்டுமெனில், அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை கைவிட
வேண்டுமென்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
Posted by ENB at 14:42 0 comments
பிரித்தானிய அரசியல் தலையீடு ஐ.நா.சபையின் இராணுவ தலையீட்டுக்கு முதற்படி!
இலங்கை அரசு - விடுதலைப் புலிகள் - நோர்வே அரசுமுத்தரப்பினரின் உச்சிமாநாடு
விரைவில் லண்டனில்
பிரிட்டிஷ் அனைத்துக் கட்சிக் குழுவின் ஆதரவில் நடத்துவதற்கு ஏற்பாடு
லண்டன்,மே 2
இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நோர்வே அரசாங்கம் ஆகிய
முத்தரப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் உச்சி மாநாடு ஒன்று விரைவில் இங்கு
நடைபெற உள்ளது.ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவுவதற்கான
பிரிட் டிஷ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிக் குழு உச்சி
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளது. முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் கெய்த் வாஸ் தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (அ.க.நா.கு)
நேற்றுக் கூடி இந்த முக்கிய முடிவை மேற்கொண்டது.இங்கைத் தமிழர்களுக்கு
நீதியுடனும் கௌரவத்துடனுமான ஒரு தீர்வைப் பெற் றுக் கொடுப்பதற்கென பிரிட்டிஷ்
நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட
உயர் மட்டக் குழு ஒன்று நேற்று உருவாக்கப் பட்டது.மேற்படி குழு நேற்று அதன்
தலைவரும் முன்னாள் வெளிவிவகார காமன் வெல்த் அமைச்சருமான தற்போதைய தொழிற் கட்சி
எம்.பியுமான கெய்த் வாஸ் தலை மையில் முதன்முறையாகக் கூடி மூன்று முக்கிய
முடிவுகளை எடுத்தது.இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், நோர்வே அரசு ஆகியவற்றின்
பிரதிநிதி களை லண்டனுக்கு அழைத்து உச்சி மாநாடு நடத்துவது என்பதே அந்த
முடிவுகளில் முதலாவதாகும். *காமன் வெல்த்தின் செயலாளர் நாய கம் டொனால்ட்
மக்கினொனை அழைத்து இலங்கை இனப்பிரச்சினையின் தற் போதைய நிலை, இப்போதைய தடங்கல்
நிலையை நீக்குவது என்பன குறித்து முத்தரப்புப் பிரதிநிதிகளுடனும் கலந்து
ஆராய்வது.* மோதல்களால் மக்கள் பாதிக்கப் பட்ட, அதிலும் மிக மோசமாகப் பாதிக்
கப்பட்ட இடங்களுக்கு அ.க.நா.குழு விஜ யம் செய்து நிலைமையை நேரில் கண்ட
றிவது.ஆகிய ஏனைய இரண்டு முடிவுகளும் அனைத்துக் கட்சிக் குழுவில் நேற்றைய
முதலாவது கூட்டத்தில் மேற்கொள்ளப் பட்டன. ஈழத் தமிழர் பிரச்சினையைத்
தீர்ப்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு ஒன்று
உருவாக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அனைத்துக் கட்சிக்குழு ஒன்று
தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்டது சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றென அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அனைத்துக் கட்சிக் குழுவின் உதவித் தலைவராக சைமன் உறியுக் (எம்.பி), பிர தித்
தலைவராக பேர்ன் பேர்ட்ஸ்ரோ (எம்.பி), செயலாளராக அன்ரூ பெல்லிங்கும் பணிபு
ரிவர்.முக்கியமான முதற்படிஈழத் தமிழர் நலன் கருதி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பது இலங்கைப் பிரச் சினைக்கு சமாதான
வழியில் நீதியான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதில் பிரிட்டிஷ்
நாடாளுமன்றத்துக்கு உள்ள அக் கறையை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு
முக்கியமான முதற்படியாகும்.அ.க.நா.குழுவின் முயற்சி, இரு தரப்பு களும் 2002
ஆம் ஆண்டின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்துச் செயற்பட்டு ஆக்க பூர்வமான
புதிய சுற்றுப் பேச்சுக்களை ஆரம் பிப்பதற்குப் பெரிதும் உதவுமென நான் நம்பு
கின்றேன் என்று அனைத்துக் கட்சிக் குழு வின் தலைவரும் முன்னாள் வெளிவிவ கார
அமைச்சருமான கெய்த் வாஸ் கருத்துத் தெரிவித்தார். (அ)
மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தை பகிர்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு-
சுதந்திரக் கட்சியின் யோசனையில் தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு
மாவட்ட அலகின் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினைக்குத்தீர்வு காணும்
யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நேற்று முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின்
கீழ் மாவட்டங்கள் தோறும் ஜனாதிபதியினால் முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு மாவட்ட சபைகளுக்கும்
மூன்று நிறைவேற்றுக்குழு நியமிக்கப்படும். இதில் நிதிக்குழு முதலமைச்சரின்
கீழ் இயங்கும் என்றும் சுதந்திரக்கட்சியின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை தீர்வுக்காண ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்வுத்திட்ட
யோசனையினை நேற்றுமாலை கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜனஐக்கிய
முன்னணியின் மேதின கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான
மைதிரிபால சிறிசேன வெளியிட்டுவைத்தார்.
சுதந்திரக்கட்சியினால் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டயோசனை ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவிடமும் சர்வகட்சி குழுவிடமும் சமர்ப்பிப்பதற்காக பிரதமர் ரட்ணசிறி
விக்ரமநாயக்கவிடம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில்
பிரமேஜயந்தவினால் கையளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்வு யோசனையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிகாரத்தைப் பகிர்வதன் மூலம் தீர்வு காணப்படும்.
அதிகாரத்தை விரிவாக பகிர்வதற்கு புதிய அலகாக மாவட்ட முறை
பிரேரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு அலகு
உருவாக்கப்படும். இந்த இரண்டு மாவட்டங்களும் ஒரே பூகோள மைய பிரதேசத்தில்
அமைந்திருத்தல்வேண்டும். அம்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் விருப்பப்படி இது
ஒன்றிணைக்கப்படும்.
அதிகாரப்பரவலாக்கலின் போது பாராளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரமும்
நீதிமன்றத்தின் அதிகாரமும் பாதுகாக்கப்படும்.
புத்தமதம்
புத்தமதத்திற்கு ஒரு இடத்தை பெற்றுக்கொடுப்பதோடு, புத்தசாசனம் அரசாங்கத்தினால்
பாதுகாக்கப்படும். அத்தோடு தற்போது உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் இதர
மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும்.
அரசியலமைப்பு
பாராளுமன்ற அரசியலமைப்பு முறை மீண்டும் நிறுவுவதற்கு சுதந்திரக் கட்சி
முன்நிற்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து
பிரதமருக்கு அமைச்சரவை அதிகாரத்தை வழங்குவதற்கு கட்சி மாற்றுயோசனை ஒன்றை
முன்வைத்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் முறை ஒழிப்பது தொடர்பாக தேசிய இணக்கத்தை
ஏற்படுத்த முடியாவிட்டால் நிறைவேற்று அதிகாரத்தில் மறுசீரமைப்பதற்கும்
நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதிகார பகிர்வு
அதிகாரபகிர்வு தொடர்பாக ஐந்து விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில்
இரண்டு மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்படல். அவ்வாறு ஒன்றிணைக்கப்படும் மாவட்டங்கள்
பூகோள ரீதியில் ஒன்றாக இருக்கவேண்டும். அத்தோடு, பிரதேசங்களுக்கு
தொடர்பிருக்கவேண்டும்.
அந்த மாவட்ட மக்களின் விருப்பத்தின் பேரிலேயே மாவட்டங்கள் இணைக்கப்படும்.
அதோடு மாவட்டங்களில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் மீது விசேட கவனம்
செலுத்தப்படும்.
----------------
விவாதத்துக்கு:
விதுரன் கட்டுரை
விவாதத்துக்கு:
இரண்டு பிரச்சனைகளை கீழ்க்காணும் கட்டுரை கிழப்புகிறது,
1) சர்வதேச சமூகம்: நம்மை அடிமைப்படுத்தும் சக்தியா? நமது விடுதலை விரும்பியா?
2) முழு நாட்டு மக்களையும் அய்க்கியப் படுத்தும் முழக்கம் சுயநிர்ணய உரிமையா?
அதிகாரப் பரவலாக்கமா?
படித்துப் பாருங்கள்!
இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினர்
-விதுரன்- தினக்குரல்
வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத்
தொடரும் இந்தத் தாக்குதல், இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி
மேற்கொள்ளப்படுகிறது. வான் புலிகளைத் தேடியே விமானப் படையினர் இந்தக் கடும்
தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
புலிகளின் வான் வழித் தாக்குதலையடுத்து அவசர அவசரமாக பாதுகாப்பு
நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்த படைத்தரப்பு தற்போது வான் புலிகளின்
அடுத்த வருகைக்காக காத்திருக்கின்றனர். வான் புலிகளை வரவழைப்பதற்காகவே
வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் வான் புலிகளை முழு உலகிற்கும்
அறிமுகப்படுத்தியது. அன்று வான் புலிகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் அடுத்த
தடவையாவது புலிகளின் வானூர்திகளை அழித்துவிட வேண்டுமென்பதில் அரசும்
படைத்தரப்பும் குறியாகவுள்ளன.
புலிகளின் முதல் தாக்குதல் நடைபெற்று சுமார் ஒரு மாதங்களாகிவிட்ட நிலையில்
அவர்கள் அடுத்த தாக்குதலை எங்கே, எப்போது நடத்துவார்களென்ற பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தாக்குதலின் போது படையினர் அதனை எவ்வாறு
எதிர்கொள்வரென்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பும் பேசினாலும்
அது சாத்தியப்படாததொன்றாகவேயுள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே
பேச்சுகள் நடைபெற வேண்டுமென புலிகள் வலியுறுத்துகையில் அந்த உடன்பாட்டின்
அடிப்படையில் பேச்சுகள் நடத்தத் தாங்கள் தயாரில்லையென அரசு திட்டவட்டமாகக்
கூறிவிட்டதுடன் அந்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும்
தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் பேசுவதென்றால் கிழக்கில் இராணுவத்தினர்
கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து அவர்கள் விலக வேண்டும். போர்நிறுத்த
உடன்பாடானது வடக்கு - கிழக்கில் இரு தரப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகளையும்
எல்லை நிர்ணயம் செய்கிறது. இதனால், இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மீண்டும்
பேச்சுகளை ஆரம்பிப்பதாயின், இந்த உடன்பாடு கைச்சாத்திட்ட காலப்பகுதியில்
இருதரப்பும் எங்கெங்கு நிலைகொண்டிருந்தார்களோ அந்தந்த இடங்களுக்கு அவர்கள்
செல்ல வேண்டும்.
ஆனால், கிழக்கில் புலிகள் வசமிருந்து பல பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டதாகக்
கருதும் அரசு, அந்தப் பிரதேசங்களை புலிகளிடம் மீண்டும் ஒப்படைக்கத் தயாரில்லை.
இதனால், போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் பேசத் தயாராயில்லை என்பதை
தெளிவுபடுத்தியுள்ளது.
அதேநேரம், போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்தும் விலக அரசு தீர்மானித்துள்ளது.
தற்போது கிழக்கில் பெற்ற வெற்றியைப் போல் வடக்கிலும் பெற முடியுமெனக்கருதும்
அரசு, வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளைத் தொடங்க இந்த உடன்பாடு பெரும்
தடையாகவேயிருக்குமெனக் கருதுகிறது. இதனால், போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து
விலகி முழு அளவில் போர்ப் பிரகடனம் செய்ய அரசு விரும்புகிறது.
சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும்
ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சியின் அடித்தளமே இந்தப் போர்நிறுத்த
உடன்பாடுதான். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே இந்த உடன்பாடு
கைச்சாத்திடப்பட்டது. ஆனால், புலிகள் இன்று பலமிழந்துவிட்டதாகக் கருதும் அரசு,
இந்த உடன்பாடானது படையினரின் நடவடிக்கைகளுக்கு மிகப் பெரும்
தடையாகவிருக்குமெனக் கருதுகிறது.
ஆனாலும், இந்த உடன்பாட்டிலிருந்து ஒருதலைப்பட்சமாகத் தான் விலகிவிடுவதை அரசு
விரும்பவில்லை. உடன்பாட்டின்படி 14 நாள் முன்னறிவித்தலை கொடுத்துவிட்டு
விலகிவிடலாம். ஆனால், அது சர்வதேச ரீதியில் தங்களுக்கு பெரும் பாதிப்புகளை
ஏற்படுத்தி விடுமெனக் கருதும் அரசு, அதனை மக்களைக் கொண்டு ரத்துச் செய்ய
விரும்புகிறது.
போர்நிறுத்த உடன்பாடு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அதன் மூலம்
உடன்பாட்டை நிராகரித்துவிடத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மக்கள் ஏற்காத
உடன்பாடொன்றை தாங்களும் ஏற்கப் போவதில்லையெனக் கூறி அதிலிருந்து விலகி முழு
அளவில் புலிகளுக்கெதிரான போரில் இறங்கிவிடலாமெனக் கருதுகிறது.
அண்மையில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில்,
இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமென பெருமளவு மக்கள்
விருப்பம் தெரிவித்துள்ளனர். கிழக்கில் அண்மைக் காலமாக படையினர் பெற்ற
வெற்றியும் தற்போதைய யுத்தமுனைப்புகளுமே தென்னிலங்கை மக்களை இராணுவத்
தீர்வுக்கு ஆதரவு வழங்கச் செய்துள்ளது.
இந்த மக்கள் கருத்துக் கணிப்பும் போர்நிறுத்த உடன்பாடு தொடர்பாக சர்வஜன
வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அரசைத் தூண்டியுள்ளது. இதன்மூலம் சமாதான
முயற்சிகளை விடுத்து புலிகளுக்கெதிராக முழு அளவில் போரொன்றை தொடுக்க அரசு
தீர்மானித்துவிட்டது தெளிவாகிறது.
பல்வேறு நாடுகளிலிருந்தும் வாங்கிக் குவித்துள்ள ஆயுதங்களை புலிகளுக்கெதிரான
போரில் பயன்படுத்திவிட வேண்டுமென்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. மக்களே
சமாதான முயற்சியை விரும்பாது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்குமாறு அனுமதி
வழங்குகையில் பேச்சுக்கான தேவையில்லையெனக் காண்பிக்கவும் அரசு விரும்புகிறது.
போர்நிறுத்த உடன்பாடானது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டால்,
அது சமாதான முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கும் செயலென்பதுடன் வடக்கு -
கிழக்கில் முழு அளவிலான போருக்கு அரசுக்கு கிடைக்கும் மக்கள் அங்கீகாரமாகவே
கருதப்படும். சர்வதேச ரீதியிலும் இதனை நியாயப்படுத்த அரசும் முயலும்.
போர்நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து போருக்கு அங்கீகாரம் வழங்கும் தென்னிலங்கை
மக்களின் செயலானது யுத்தம் வடக்கு - கிழக்கில் மட்டுமே நடைபெற வேண்டுமென
அங்கீகரிப்பதாயிராது. அது முழு நாட்டுக்குமுரியதாயிருக்குமென்பதை அவர்கள் உணர
வேண்டும்.
அதனால், போர்நிறுத்த உடன்பாட்டை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம்
நிராகரிப்பதென்பது முழு நாட்டையும் போருக்குள் தள்ளிவிடுவதற்கு தென்னிலங்கை
மக்கள் வழங்கும் அங்கீகாரமாகவேயிருக்கும்.
வடக்கு - கிழக்கில் அண்மைக்காலமாக அரசு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி
வருகையில் புலிகளும் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். வான்
புலிகளின் வருகையானது இதனையே காட்டுகிறது.
இதைவிட யாழ். குடாநாட்டிற்குள் புலிகளின் தற்காப்பு வெடிகுண்டு அணி'
ஊடுருவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு ஊடுருவியுள்ளதாக
கூறப்படுகிறது. கரும்புலி அணி போன்றல்லாது இந்த `தற்காப்பு வெடிகுண்டு
அணி'யின் செயற்பாடிருக்குமென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இடுப்புப் பட்டியில் வெடி குண்டைப் பொருத்திக் கொண்டு இந்த அணி தனது
தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும். படையினரிடம் இவர்கள் பிடிபடும்
பட்சத்தில் சயனைட் உட்கொள்ள மாட்டார்கள். மாறாக, தங்கள் இடுப்புப் பட்டியில்
பொருத்தப்பட்டிருக்கும் குண்டை வெடிக்க வைத்து தாங்களும் இறப்பதுடன் தங்களைப்
பிடிக்க முயலும் படையினரையும் கொல்வதே இந்தத் `தற்காப்பு வெடிகுண்டு அணி'யின்
நடவடிக்கையாக இருக்கும்.
போராளி ஒருவர் சயனைட் அருந்தி இறப்பதை விட படையினருக்கும் இழப்பை
ஏற்படுத்தும் புதிய உத்தியில் புலிகள் இறங்கியுள்ளனர். இதனைப் படையினரும்
அறிவர். ஏற்கனவே, இரு சம்பவங்கள் இவ்வாறு நடந்துள்ளன. ஆனைக்கோட்டையிலும் யாழ்
நகரில் நாவலர் வீதியிலும் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை கரும்புலித் தாக்குதலென
படையினர் கூறியிருந்தனர். ஆனால், இரு இடங்களிலும் படையினருக்கு இழப்புகளை
ஏற்படுத்திவிட்டு தங்களையும் அழித்துக் கொண்டவர்கள் புலிகளின் `தற்காப்பு
வெடிகுண்டு அணி'யைச் சேர்ந்தவர்களே.
இதுபோன்று புலிகளின் பல்வேறு செயற்பாடுகளும் களமுனையில் படையினருக்கு பலத்த
இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படுகின்றன. இவற்றை
எதிர்கொள்வதில் படையினர் தற்போது புதிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
வான் புலிகளின் வருகை படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்
அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வான் புலிகளை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய
புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு - கிழக்கு
எல்லைப்புறங்களிலுள்ள படைமுகாம்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள்
பொருத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், முக்கிய படைத்தளங்களில் விமான எதிர்ப்பு
ஏவுகணைகளும் பொருத்தப்படவுள்ளன.
மிகவும் தாழ்வாகப் பறக்கும் புலிகளின் விமானங்களை கண்டறிவதற்காக மிக நவீன
ராடார்களை கொள்வனவு செய்வதிலும் அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது. வான்
புலிகள் மீண்டுமொருமுறை வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்திவிடக் கூடாதென்பதில்
படைத்தரப்பு தீவிர கவனம் செலுத்துகிறது. அதேநேரம், வான் புலிகளின் வருகையைத்
தூண்டும் விதத்தில் வன்னியில் தினமும் இரவு பகலாக கடும் விமானத் தாக்குதலும்
நடைபெற்று வருகிறது.
இந்தத் தாக்குதலால் புலிகள் சீற்றமடைந்து வடக்கு - கிழக்கில் அல்லது தெற்கில்
எங்காவது பாரிய தாக்குதலொன்றுக்காக தங்கள் விமானங்களை அனுப்பும் போது அவற்றை
தாக்கிவிட வேண்டுமென படைத்தரப்பு முனைப்புக் காட்டுகிறது. இதனைப் புலிகளும்
நன்கறிவர். இதனால், படையினர் எதிர்பார்த்து காத்திருக்கையில் அவர்கள்
தொடர்ந்தும் மௌனம் சாதிப்பரென்றே கருதப்படுகிறது.
மட்டக்களப்பில் குடும்பிமலை (தொப்பிகல) பகுதியை கைப்பற்றி, கிழக்கில்
புலிகளின் பாரிய தாக்குதல் பலத்தை முறியடித்து விட்டால் பின்னர் வடக்கில்
முழுக் கவனத்தையும் செலுத்த முடியுமென அரசு கருதுகிறது. கிழக்கில் புலிகளின்,
மரபு வழிப் போர் முறையை முறியடிப்பதற்கான கடைசித் தாக்குதலை ஆரம்பிக்க
படையினர் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு இரு தரப்பும்
தயாராகிவிட்டன. மீண்டும் சமாதானப் பேச்சுகள் குறித்து பேச்சடிபட்டாலும் அது
ஒரு கண் துடைப்பாகவேயிருக்கப் போகிறது. போர்தான் முடிந்த முடிவாகிவிட்டது.
இந்த யுத்தத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து
வருகையில் போர் மேலும் தீவிரமடையுமானால் அவர்களது நிலைபற்றி எடுத்துக் கூற
முடியாதளவுக்கு அவலம் நிறைந்ததாயிருக்கும். இதனை உணர்ந்தாவது இந்தப் போரை
நிறுத்த சர்வதேச சமூகம் தலையிடமாட்டாதா என அவர்கள் ஏங்குகின்றனர்.
Posted by ENB at 07:20 0 comments
முக்கிய இலங்கைச் செய்திகள்
ஸ்ரீ லங்காவிற்கு ஆயுத வழங்கல்- தமிழக சட்ட சபையில் அமளி
நிஷாந்தி
தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு
ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே
அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை
எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு
முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில்
தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள்ள செய்தி
நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அங்குள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் சமரச தீர்வு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் உட்பட பலர்
சொல்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் சிறிலங்காவுக்கு இராணுவ உதவியை மத்திய
அரசு வழங்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள்
கட்சியின் கோ.க. மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரிகையிலே வந்த இந்த கருத்துக்கள், செய்திகள் உண்மையானவைதானா என்பதனை
அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். என்ன செய்தி
வந்திருக்கின்றதென்றால் இலங்கைக்கு போர்க் கருவிகளை வழங்குவதில்லை என்ற
முடிவுக்கு மாறாக இந்திய அரசு தற்போது ஆயுதங்களை வழங்கியுள்ளது என்று செய்தி
வந்திருக்கின்றது. ஆனால் இது உண்மைதானா என்பதனை அறிந்து கொள்ள வேண்டிய அந்த
வாய்ப்பை நாம் உருவாக்கிகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்தது உண்மைதான் என்றால் நாம் மத்திய அரசுக்கு,
இதிலே இன்னும் ஒற்றுமையோடு இருந்து நம்முடைய அழுத்தமான வேண்டுகோளை
விடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழக முதலமைச்சர் சபையில்
தெரிவித்துள்ளார்.
நன்றி: வீரகேசரி 04-23-2007
அழுத்தம்: ENB
நோர்வே தூதுவரின் கிளிநொச்சி விஜயம் இரத்து
நிஷாந்தி
நோர்வே தூதுவரின் இன்றைய கிளிநொச்சி விஜயம் இரது செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களிற்க்காகவே நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் கிளிநொச்சி
செல்வதை இரத்து செய்யுமாறு அரசாங்கம் கோரியதையடுத்து விஜயம் இரத்து
செய்யப்பட்டதாக தூதரக பேச்சாளர் எரிக் நுர்கன் பேர்க் தெரிவித்துள்ளார்.
நன்றி: வீரகேசரி :4/23/2007 :: 4:08:28 AM
பொலிஸாருக்குரிய சிவில் அதிகாரங்கள் அனைத்தும் அரசால் முப்படையினருக்கும்
வழங்கப்பட்டது
[23 - April - 2007] -கே.பி.மோகன்-
சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் அதிகாரங்களை அரசாங்கம்
முப்படையினருக்கும் வழங்கியுள்ளது.
2007.04.06 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 1491/18 இலக்க அதி விசேட
வர்த்தமானியின் மூலம் பொது மக்கள் பாதுகாப்பு சட்டவாக்க 40 ஆம் அதிகாரத்தின்
கீழேயே பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்திற்கு அமைய இனிமேல் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரும்
பொலிஸாரின் கடமைகளை செய்ய அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைவாக படையினர் நாட்டிலுள்ள அனைத்து
மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை பேணும் பொலிஸ் நடவடிக்கைகளில்
ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை,
திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இச்சட்ட அதிகாரம் முதலில்
நடைமுறைக்கு வருகிறது.
பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் படையினரின் இந்த அதிகாரம்
விஸ்தரிக்கப்படவுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக இந்த
நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடவுள்ளனர்.
சகலவிதமான கைதுகள், கலகம் அடக்குதல், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும்
கூட்டங்கள், பேரணிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்தல், சட்டம் ஒழுங்கைப்
பேணுதல் போன்ற சகல சிவில் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபடுவர்.
சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அனைத்து பொதுமக்களினதும்
பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அமைதியை நிலைநாட்டுவது, சட்ட விரோத
நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்ற பொலிஸ் நடவடிக்கைகளை
மேலும் இலகு படுத்தும் நோக்குடனேயே அரசாங்கம் பொலிஸாருக்குள்ள அதிகாரங்களை
படையினருக்கும் வழங்கியுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரம் மூலம் பொலிஸ் அதிகாரங்கள்
படையினருக்கும் ஜனாதிபதியினால் வழங்கும் உத்தரவு வர்த்தமானி அறிவித்தல் மூலம்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொலிஸ்
அதிகாரங்கள் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
நன்றி: தினக்குரல்
பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சாகும் வரை
உண்ணாவிரதம்
[23 - April - 2007]
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட தமிழ்,
சிங்கள அரசியல்கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை
நீதிமன்றில் ஆஜர்செய்து விடுவிக்க வேண்டுமெனக்கோரியே இவர்கள் அனைவரும்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்வே தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனத் தலைவர் சரத்குமார பொன்சேகா கடந்த மூன்று
தினங்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும்
நிலையிலேயே ஏனைய அரசியல்கைதிகளும் அவருடன் இணைந்து இந்தப் போராட்டத்தில்
குதித்துள்ளனர்.
பூஸா தடுப்பு முகாமில் 6 பெண்கள் உட்பட 81 தமிழ், சிங்கள அரசியல் கைதிகள்
தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினக்குரல்
ஐ.நா. வின் மனிதாபிமான உதவி அமைப்பின் இணைப்பு அமைப்பை வெளியேறுமாறு பணிப்பு
[23 - April - 2007]
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புகளின் இணைப்பு அமைப்பை
வடக்கு, கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு
அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த அமைப்பு அதன் தேவைக்குரிய காலப்பகுதியை விட
அதிக காலம் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பானது ஆழிப்பேரலை நிவாரண உதவிகளை வழங்குவதற்காக வந்திருந்தது.
எனினும், வேறு பல தேவைகளுக்காக இங்கு அது தொடர்ந்து தங்கி சேவைகளை ஆற்றி
வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புகளின் இணைப்பு அமைப்பானது
மனித உரிமைகள் விவகாரத்தில் கண்காணிப்பை மேற்கொள்வதாக அரசாங்கம்
கோபமடைந்துள்ளது.
வேறு பல அமைப்புகள் மனித உரிமை கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது
ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை நிவாரண உதவிகளுக்காக இலங்கைக்கு தமது அமைப்பு வந்திருந்தது எனவும்
எனினும், அது மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிப் பணிகளை ஆற்றி
வந்திருக்கின்றது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி
அமைப்புகளின் இணைப்பு அமைப்பின் பேச்சாளர் ரீபென் பங்கர் நியூயோர்க்கில்
தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பு மனித உரிமைகள் விவகாரத்தை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளவில்லை
எனவும் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் தலைவர் வலன்ரின் ஹற்சின்ஸகி தற்போது கிளிநொச்சியில்
தங்கியுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்
மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன்
கலந்துரையாடல்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினக்குரல்
தோட்டத்தில் தமிழ்ப் பாடசாலை இல்லை; பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளில் கற்க
வேண்டிய நிலைமை
[23 - April - 2007]
மில்லவான தோட்டத்தில் தமிழ்ப் பாடசாலை ஒன்று இல்லாததன் காரணமாக
அத்தோட்டத்தில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களின் முப்பது பிள்ளைகள் சிங்களப்
பாடசாலையில் சிங்கள மொழிமூலம் பாடங்களை கற்கின்றனர். இப்பிள்ளைகள் தமிழ்
மொழியை எழுதவோ, படிக்கவோ அல்லது தமிழில் பேசவோ முடியாதுள்ளதுடன் தமது
பெற்றோர்களுடன் சிங்கள மொழியிலேயே உரையாடுவதையும் காண முடிகிறது.
பெற்றோர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு சிங்களத்திலேயே பதிலும்
அளிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி, இப்பிள்ளைகள் இந்துக்களாக இருந்தும் இந்து சமய கலாசார
பண்பாடுகளை அறியாதவர்களாக உள்ளனர்.
சிங்கள மொழியைக் கற்பதால் சிங்கள மக்களின் கலை, கலாசார, பண்பாடு
பாரம்பரியங்களையே கடைப்பிடித்து வருகின்றனர்.
தமிழ்ப்பிள்ளைகளான இவர்கள் எதிர்காலத்தில் தமிழர்களாகவே வாழுவார்களா? அல்லது
தங்களை அறியாமல் மதம் மாறிவிடுவார்களா என்பதே கேள்வியாக உள்ளதாக பெற்றோர்கள்
தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக இப்பிள்ளைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது தமது
பிள்ளைகள் தமிழ் மொழியிலேயே கல்வி கற்று வரவேண்டும் என்று தாம்
விரும்புவதாகவும் அதனால் தோட்டத்தில் தமிழ்ப்பாடசாலை ஒன்றை அமைத்து தரும்படி
தோட்டத் துறை சார்ந்த அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்து
வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், எவருமே உரிய நடவடிக்கை எடுக்காததால் தமது பிள்ளைகளின் கல்வி
பாதிக்கப்படக் கூடாது என்பதாலேயே சிங்கள பாடசாலையில் அனுமதித்துள்ளதாகவும்
தெரிவித்தனர்.
எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் தமிழ்ப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தர
நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தவறினால் எமது பிள்ளைகள் வருங்காலத்தில்
சிங்கள மொழியிலேயே கற்று வரவேண்டும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நன்றி: தினக்குரல்
Posted by ENB at 05:52 0 comments
21 April 2007
ஆயுத வியாபார போட்டியில் அம்பலமான இந்தியா
தாக்குதல் ரக ஆயுதங்களையும்இலங்கைக்கு வழங்கியது இந்தியா!பாகிஸ்தான்
"இணையத்தளம்' தகவல்
கொழும்பு, ஏப்.21
தற்பாதுகாப்புக்கான ஆயுத தளபாடங்களைத் தவிர, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள்
எவற்றையும் இலங் கைக்கு வழங்குவதில்லை என்று வெளிப்பகட்டுக்குக் கூறி வரும்
இந்தியா, அந்நிலைப்பாட்டுக்கு மாறாக தாக்குதல் ரக ஆயுதங்களை இலங்கைக்கு
வழங்கியிருக்கின்றது. இவ்வாறு தெரிவித்து, இலங்கைக்கு இந்தியா வழங் கியதாகக்
கூறப்படும் ஆயுதங்களின் பட்டியலையும் குறிப் பிட்டு, விவரமான செய்தி ஒன்றை
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இணையத்தளம் ஒன்று நேற்று முன்தினம்
வெளியிட்டிருக்கின்றது. இந்திய மத்திய அரசு, தனது ஆட்சிப் பங்காளியான
தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாட்டைப் புறக்கணித்து தாக் குதல் ரக ஆயுதங்களை
இலங்கைக்கு வழங்கியிருப்பதா கவும் அச்செய்தி தெரிவித்தது. ஆபத்து ஏற்படுத்தாத
தற்காப்புக்குத் தேவையான ஆயுத தளபாடங்களையே இலங்கைக்கு வழங்குவது என்ற தனது
வெளிப்படையான நிலைப்பாட்டை இந்தியா எவ்வாறு மறைமுகமாக மீறியிருக்கின்றது
என்பதை செய்தியாளர் ஒருவர் கண்டுபிடித்த ஆவணம் ஒன்று அம்
பலப்படுத்தியிருப்பதாக அந்த இணையத்தளச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தொடர்புகொண்டு
உண்மை நிலை குறித் துக் கருத்துக்கேட்டபோது, கருத்து ஏதும் தெரிவிக்கத் தூத
ரகம் மறுத்துவிட்டது. இணையத் தளச் செய்தியில், இந்தியா இலங்கைக்கு வளங்கிய
தாக்குதல் ஆயுதங்களும் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
நன்றி: யாழ் உதயன்
Posted by ENB at 14:08 0 comments
19 April 2007
எச்சரிக்கை : " ஜனநாயக தலைமை "
சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணிஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு
முடிவுஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு கொழும்பு,
ஏப்ரல் 19வீ.
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன்
தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும்
ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத்
தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன.தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து
செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச்
செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக
அறிவித்திருக்கின்றனர்.இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில்
த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில்
வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்செயலாளர் என்ற வகையில் தி.சிறிதரன்
ஆகியோர் ஒப்பமிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மேற்படி மூன்று கட்சிகளும் விடுக்கும்
கூட்டறிக்கை என்ற தலைப்பில் அது அமைந்திருந்தது. அதன் முழு விவரம் வருமாறு:
எமது மக்களின் அவல நிலையையும், வன்முறைக் கலாசாரத்தையும், ஏற்பட்டுவரும்
அழிவுகளையும் கருத்திற்கெடுத்து, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எய்துவதை
அடிப்படை இலக்காகக் கொண்டு முதற்படியாக தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ
மக்கள் விடுதலைக்கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)ஆகிய
மூன்று கட்சிகளும் ஐக்கியப்பட்டுச் செயற்பட்டு வருகின்றோம்.இலங்கையில்
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண
அடிப்படையான சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அதேவேளை, தமிழர் விடுதலைக்
கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இந்திய அமைப்பு முறையில் அரசியல் தீர்வு
எட்டப்படவேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றார். தமிழீழ மக்கள்
விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் சர்வகட்சிக் குழுவின் முன்னால்
நேரில் சமுகமளித்து சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்தினார்.ஈழமக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) ஒரு விரிவான அரசியல் தீர்வுத்
திட்டத்தை அனைத்துக் கட்சிக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. மேற்படி யோசனைகள்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான, அதிகாரப் பகிர்ந்தளிப்பு தொடர்பான
கலந்துரையாடல்களை செயற்பாடுகளை மேலும் செழுமைப்படுத்திச்செல்ல அடிப்படைகளாக
அமையும்.
நன்றி: யாழ் உதயன்
Posted by ENB at 13:54 0 comments
18 April 2007
கிழக்கைக் காக்க கிளர்ந்தெழுவோம்!
எதிர்ப்பின் மத்தியிலும் கிழக்கில் தமிழர்கள்வேறு இடங்களில் மீளக்
குடியமர்த்தப்படுகின்றனர்கூட்டமைப்பு கூட்டத்தில் கண்டனம்.
கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்
குடியமர்த்தாமல், வேறு இடங்களில் தொடர்ந்தும் குடியேற்றி
வருகிறது.நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இது விடயமாக நீண்டநேரம் ஆராய்ந்தனர்.மட்டக்களப்பு, திருகோணமலை
மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகளை அவர்களது சொந்த இடங்களில்
மீளக் குடியமர்த்தாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி மக்களின் விருப்பத்துக்கு
மாறாக வேறு இடங்களில் அரசாங்கம் குடியேற்றி வருகிறது.இது குறித்துப்
பலதடவைகள் அரசிடம் எடுத்துக் கூறியும் அது செவிசாய்ப்பதாக இல்லை என்று
திருமலை மாவட்ட எம்.பி. துரைரட்ணசிங்கம் கூட்டத்தில் நீண்டநேரம்
விளக்கினார்.வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாமை குறித்தும்
நேற்றைய கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது.வடக்கு கிழக்கில் உள்ள மொத்தம் 31
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 பேர் கூட்டமைப்பினர். அவர்களை மேற்படி
கூட்டங்களுக்கு அழைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று
சுட்டிக்காட்டப்பட்டது.வடக்கு கிழக்கில் இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள்,
கைதுகள், கொள்ளைகளை நிறுத்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும்
கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
நன்றி : யாழ் உதயன்
Posted by ENB at 11:45 0 comments
17 April 2007
மண்டபம் முகாம் அகதிகள்- கியூ பிரிவு அட்டகாசம்
மண்டபம் முகாமிலிருந்த 3 இளைஞர்கள்விசாரணையின் பின்னர் தடுத்து
வைப்பு-விடுதலைப் புலிகளின் உளவாளிகள் என்ற சந்தேகத்தில்
சென்னை,ஏப்.17
மண்டபம் முகாமில் தங்கியிருந்த ஈழ அகதிகளில் மூவர் "கியூ' பிரிவு பொலிஸாரால்
சென்னைக்குக் கூட்டிச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இரகசிய விசா ரணையின்
பின்னர் அவர்கள் மூவரும் செங்கல்பட்டுச் சிறப்பு முகாமில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவஜோதீஸ்வரன் (வயது 28),
மன்னாரைச் சேர்ந்த ஜஸ்டின்ராஜ் (வயது 20), சுகந்தன் (வயது 27) ஆகியோரே
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.இலங்கையில் இராணுவக்
கெடுபிடிகள் அதிகரித்த தால் இவர்கள் மூவரும் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில்
தங்கியிருந்தனர்.சம்பந்தப்பட்ட மூவரும் விடுதலைப் புலிகளின் உள வாளிகளாக
இலங்கையில் செயற்பட்டவர்கள் என்று விசாரணைகளில் இருந்து அறியவந்துள்ளதாகப்
பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.விசாரணைகளின் பின்னர் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது:மண்டபம் முகாமில் அகதிகள் போர் வையில் விடுதலைப் புலிகள் ஊடுருவி
இருப்பது இதற்கு முன்பும் நடந்தது இரு கிறது. ஆனால் உளவாளிகள் ஊடுருவி
அவர்கள் எங்களின் பிடியில் மாட்டிக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அவர்கள்
தமிழக மக்களின் மனோ நிலையை அறிந்து கொள்ளவும் இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்
பற்றி தெரிந்து கொள்ளவும் வந்திருக்கலாம் என்று நாங் கள் கருதுகிறோம்.இதற்காக
விடுதலைப் புலிகள் அல் லது அவர்களின் உளவாளிகள் பலர் அகதி கள் போர்வையில்
தமிழகத்திற்குள் ஊடு ருவி இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற் பட்டு உள்ளது
என்றார்.இதேவேளை தமிழகத்தின் அனைத்து அகதிகள் முகாம்களிலும் கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதிரடி சோதனைகளும் நடத்தப்படுகிறது. அகதி கள்
ஒவ்வொருவரும் தனித் தனியாக கண் காணிக்கப்படுகிறார்கள்.
நன்றி: யாழ் உதயன்
Posted by ENB at 19:12 0 comments
ஈழ விடுதலைப் போரை கருவறுக்கும் இந்திய மத்திய மாநில அரசுகள்
ஈழ விடுதலைப் போரை கருவறுக்கும் இந்திய மத்திய மாநில அரசுகள்.
இந்திய மத்திய மாநில அரசுகள் ஈழத்தமிழர்களின் நண்பர்கள் என பசப்பிக்கொண்டு,
ஈழ அகதிகளுக்கெதிராகவும், விடுதலைப் புலிகளுக்கெதிராகவும், தமிழக கடற்
தொழிலாளர்களுக்கெதிராகவும் செயற்பட்டுவருகின்றன.
ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள், 1983 இல் நண்பன் என்ற போர்வையில் புகுந்து,
1985 இல் திம்புவில் சுயநிர்ணய உரிமைக்கு குழிபறித்து, 1987இல் ஆக்கிரமிப்பு
ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசை அடிமைப்படுத்தி, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்
போரை வேரறுக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
83 இல் ஈழத்தமிழரைக் காக்க இந்திய படையை அனுப்பு என ஓலமிட்ட மாநில திராவிடத்
தரகர்கள், பின்னர் 87 இல் கொல்லாதே கொல்லாதே தமிழனைக் கொல்லாதே என
ஓலமிட்டனர். எந்தக்காலத்திலும் 'இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து வாய்
திறக்கவேயில்லை.......ஏன்?
20 ஆண்டுகளுக்குப் பின்னால், இலங்கை இந்தியாவின் அரசியல், இராணுவ, பொருளாதார
கலாச்சார காலனியாகிவிட்டது.
இதனால் இலாபம் அடைந்தவர்கள் ஏகாதிபத்திய தரகர்களான மத்திய ஆளும் கும்பல்
மட்டுமல்ல, அவர்களுடைய மானில தரகர்களான மானில திரவிட ஆளும் கும்பல்களும்
தான்!
இலங்கையின் இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் பாதுகாப்புக்கு தான் பொறுப்பு என
இந்தியா உரிமை கொண்டாடுகிறது!
இதனை சட்டபூர்வ ஒப்பந்தத்தால் உறுதி செய்துள்ளது.
ஈழத்தமிழர்களது திருகோணமலை எண்ணைக்குதங்களை இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்து
அபகரித்துள்ளது!
சேது சமுத்திர திட்டம் அமூலாகிவருகிறது,
காங்கேசன் துறைத் துறைமுகம், பலாலி விமான நிலையம், காங்கேசன் சீமேந்து
தொழிற்சாலை, மன்னார் எண்ணை ஆராய்ச்சி என விஸ்தரிப்புவாதத்தின் கழுகுக் கண்கள்
பரந்து விரிந்து பார்த்துக் காத்துக் கிடக்கின்றன.
ஏகாதிபத்தியவாதிகளின் பிராந்திய தரகனாக இருந்து, சோசலிஸ ஜனநாயக இயக்கங்களை
கருவறுத்து, தேசிய விடுதலை இயக்கங்களை சீரழித்து இல்லையேல்
கொன்றொழித்துத்தான் இந்தப் பிற்போக்குக் கொத்தளம் தன்னை தற்காத்துவருகிறது,
வந்திருக்கிறது.
இலங்கையின் இனவெறிக் கடற்படை தமிழகமீனவர்களைக் கொன்றொழிப்பது இந்திய மத்திய
மாநில ஆளும்கும்பல்களுக்கு பயங்கரமாக தெரியவில்லை, ஏனெனில் அவர்களுக்கு
இலங்கை மைய அரசு வழங்கியுள்ள ஆதாயங்கள்தான்!
ஈழத்தமிழர்களின் நண்பர்களாக நடித்து இத்தனை ஆதாயங்களையும் அடைந்துவிட்ட
இந்திய மத்திய மாநில அரசுகள்,
அகதிகள்என்றபோர்வையில் விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள்
ஊடுருவுவதாக குற்றம் சுமத்துகின்றனர்!
இலங்கை அரசு ஒரு இனப்படுகொலைத்தாண்டவத்தை கட்டவிழ்த்துவிட்டு 5இலட்சம் மக்களை
- சமாதான காலத்தில் - ஏதிலிகள் ஆக்கியுள்ள நிலையில் நம்மை நிராயுதபாணியாக்க
இந்தியா கங்கணம் கட்டி நிற்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா என்கிற கருங்காலியை விலைக்கு
வாங்கி, போஸித்து, பாதுகாத்து, ஆயுதபாணியாக்கி, கிழக்கில் இறக்கிவிட்டுள்ள
இந்தியா, விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என்று சொல்கிறது!
பயங்கரம்: ஆயுதமா? அரசியலா?
இந்திய மத்திய மாநில அரசுகள் ஈழத்தமிழர்களின் நண்பர்கள் என்றால் அவர்களுடைய
அக்கறைக்குரிய விடயம்,
இலங்கையின் ஒருமைப்பாடா? ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையா?
இந்த சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தமிழக பிரச்சாரப்பீரங்கி
கோபாலசாமியின் கூட்டணிக்கட்சித் தலைவர் அடிமைப்பெண் ஜெயலலிதா
" தமிழகம்தீவிரவாதிகளின்ஆயுதக்கிடங்காக மாறி விட்டதால் கவனர் ஆட்சியை
கொண்டுவர வேண்டும்" என முழங்குகிறார்!
இவை எல்லாவற்றையும் சிரிப்புக்குரிய விடயங்களாக எடுத்துக்கொண்டால், வயிறு
குலுங்க சிரிக்க இன்னுமொரு விடயம் இருக்கிறது!
விடுதலைப் புலிகள் கட்டுநாயக்காவில் எறிந்த இரண்டு குண்டுகளின் சேதாராம்
இன்னும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கே தெரியாது!
இது நடந்த கையோடு மூன்றாவது குண்டை விடுதலைப் புலிகள் போட்டது
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது:
இதோ அந்தக் குண்டு:
"தமிழிழீழ வான் படை-விடுதலைப் புலிகள் என வாசிக்க- இந்திய நலன்களுக்கு எதிராக
செயற்படாது"!!
இந்தியாவுடன் நமது உறவு சுயநிர்ணய உரிமையா? சமரச சந்தர்ப்பவாதமா?
விடுதலைக்கான பாதை எது??
எமது
அடிப்படை முழக்கங்கள்
'மார்க்சிச லெனினிச மா ஓ சே துங் சிந்தனை'
வழி நடப்போம்!
ஈழத்தமிழரின் விடுதலை யுத்தம், நீதியான
தற்காப்பு யுத்தமாகும்!
ஒடுக்கும் சிங்கள தேசம், ஈழத்தமிழர்களின்
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத வரையில், தமிழ்
ஈழத்தனியரசே-பிரிவினையே-ஈழத்தமிழர்
பிரச்சனைக்கு அரசியல் தீர்வாகும்!
1987-இந்திய இலங்கை ஒப்பந்தம், 2002-ஒஸ்லோ
ஒப்பந்தங்களைக் கிழித்தெறிவோம்!
உலகெங்கும் தேசிய இன ஒடுக்குமுறையை
உக்கிரப்படுத்தும் காரணியான நவீன ஏகாதிபத்தியம்- "சர்வ தேச சமூகம்"- நமது
எதிரியாகும்!
தென்னாசியாவின்
ஜனநாயகவிரோத,எதிர்ப்புரட்சிகர,பிற்போக்கு
கொத்தளமான இந்திய விஸ்தரிப்புவாத அரசு நமது எதிரியாகும்!