மூலம் ஸம்ஸ்கிருதம் மற்றும் தமிழிலும், சுருக்க உரை தமிழிலும் தரப்பட்டுள்ளது

இறைவன் அருளாலே அவன் தாள் வணங்கி, அவன் சற்றே நமக்கும் அருள திருவுளம் கொள்ள வேண்டும் என எண்ணத்தின் விளைவாக ஏற்ற கார்யம் இது.
பக்தி பேசும் பத்தர்கள் வாயெல்லாம் மணக்கின்ற ஶ்ரீமத்பாகவத மஹாபுராணம், கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்றது. இதனை படிக்கும் அன்பர்களை பாகவதர் என்றே அழைக்கிறோம் என்பதே இதன் பெருமையைப் பறை சாற்றுகிறது.
இப்பதிப்பில் பிழைகள் இருப்பின் நமது பாகவத அன்பர்கள் அப்பிழைகளை சுட்டிக்காட்டி பிழையினை திருத்தி இவ்வேள்வியில் பங்கு கொள்ள, வேண்டி அழைக்கிறோம்.
இறைவன் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.