சித்தாடி காத்தாயி சித்தாடி சிந்தித்துப்
பூத்தாடிப் புனிதப் புத்தடி புகழ்ந்து
ஆத்தாடி இனியான் அத்தடி ஆகேனென்று
கரம் குவித்துக் காத்தாயி கும்பிட்டேன்
பரம் எனக்கு வேறில்லை நீயே
காக்கும் தாயே சரணம்
கருணாகரியே சரணம்
ஓம் அகரத்தில் அமர்ந்திடும் அம்மா போற்றி
ஓம் அவன் அவள் அதுவும் ஆனோய் போற்றி