1. கிறிஸ்தவத்தில் மக்கள் கேள்வி கேட்காமல் நம்பவேண்டிய நிலை உள்ளது.இஸ்லாமியர்களின் இந்த கருத்து மிகவும் நியாயமானதாக தென்படுகிறது. என் பதிலை படிப்பதற்கு முன்பு, இஸ்லாமிய தளம் எழுதியதை ஒரு முறை படிக்கவும்.
2. இஸ்லாம் தளங்களைப் போல கிறிஸ்த தளங்களில் மக்கள் கேள்விகள் கேட்கும் வசதி செய்துத்தரப்படவில்லை.
3. கிறிஸ்தவ ஊழியர்கள் கூட "கிறிஸ்தவ கேள்வி பதில்கள்" என்ற நிகழ்ச்சிகளை நடத்துவதும் இல்லை.
4. ஆனால், இஸ்லாம் தளங்களில் கேள்விகள் கேட்கும் வசதி உள்ளது, பல நிகழ்ச்சிகள் கேள்விபதிலுக்காக இஸ்லாமிய ஊழியர்கள் நடத்துகிறார்கள்.
..... அப்போது,ஹிந்துத்துவத்திலும் - கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள்
குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை
உணர்வீர்கள்.
இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இந்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் ‘மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்’ என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது
போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த மதங்கள் பற்றி
கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும்
தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள்
அறிந்தால் தெரிவியுங்கள்).
....
....
பால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு ‘கர்த்தரை விசுவாசியுங்கள்’ என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர ”எவரும்
கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்”
என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச்
சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்).
இஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான்.
‘நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு
அறிந்துக் கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். (16:43)
கேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் ‘கேள்வி ஞானத்திற்கு இடமில்லை’ என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?
Source: http://tamilislam-qa.blogspot.com/2008/02/blog-post_10.html
Formats Mine
1. ஏன் இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்விபதில் வசதியை செய்து கொடுத்துள்ளார்கள், கேள்விபதில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதில்லை.
2. கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்காமல் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமுண்டா? கிறிஸ்தவ கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?
1) மலேசியா நாட்டில் திருமணமான இருவரை ஷரியா சட்டம் மூலமாக பிரித்துவிட்டார்கள், இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால்..இப்படி பல ஷரியா சட்டங்கள் வேடிக்கையாகவும், பயங்கரமாகவும் இருப்பதால், மனிதர்களின் மனதில் "இஸ்லாம் பற்றி உள்ள" கருத்தை மாற்றவேண்டும் என்பதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் பல நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம், ஓரளவிற்கு இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.
2) கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும், விபச்சாரம் செய்தாள் என்றுச் சொல்லி, சாட்டையால் அடித்து தண்டிக்கவேண்டும் என்று சில நாடுகளின் ஷரியா சட்டம் சொல்கிறது. Human Rights News, BBC News, Religious Tolerance . Org
3) இந்தியாவிலும், விவாகரத்து செய்த கணவனை மறுபடியும் திருமணம் செய்யவேண்டுமென்றால், வேறு ஒரு மனிதனை தற்காலிகமாக திருமணம் செய்யவேண்டும் என்றுச் சொல்லி, ஊர் இஸ்லாமிய பெரியவர்கள் சொன்னதால், அந்த பெண் தற்கொலை செய்துவிட்ட செய்தியை நாம் அறிவோம்.
"ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."
If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ..... If he is terrorizing (the America) the terrorist, I am with him.... every muslim should be terrorist.....
http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI
a) ஏன் முகமது வன்முறை மூலமாக தன் ஆட்சியை அமைத்தார்?
b) அவர் ஏன் 10க்கும் அதிகமான திருமணங்களை செய்துக்கொண்டார்?
c) முகமதுவிற்கு 50க்கும் அதிகமான வயது இருக்கும் போது, 6 வயது சிறுமியை(தன் பேத்தி வயதில் இருக்கும்) திருமணம் செய்துக்கொண்டார்?
d) அப்பெண்ணுக்கு 9 வயதாகும் போது ஏன் தன்னுடன் தாம்பத்திய வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டார்? இன்று இது போல யாராவது செய்தால், அது சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்குமா?
e) தன் மருமகளை(வளர்ப்பு மகனின் மனைவியை) ஏன் திருமணம் செய்துக்கொண்டார்?
ஒரு பத்திரிக்கை நிறுபர் இணையத்திலிருந்து "இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் உரிமைகள்" என்ற தலைப்புப் பற்றி கட்டுரையை படித்ததற்காக, அவருக்கு மரண தண்டனை விதித்தார்களாம், ஆப்கனிஸ்தானில். இது தான் கேள்வி கேட்டால் பதில் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு அழகா? இவர் பரிதாபத்திற்கு உரியவர், அதாவது கேள்வியும் கேட்கவில்லை, படித்தார் அவ்வளவு தான், அதற்கே இந்த தண்டனை, ஒரு வேளை இவர் படித்து கேள்வி கேட்டு இருந்தால்? கேள்வி கேட்ட அந்த அரங்கத்திலேயே மரித்து இருப்பார் என்று எண்ணுகின்றேன்.
Young journalist sentenced to death in Afghanistan for reading about women's rights on the internet
A 23-year old has been sentenced to death for downloading information about women's rights in Afghanistan.
Journalist Pervez Kambaksh was reading about the role of women in Islamic socieites.
Source: http://www.dailymail.co.uk/pages/live/articles/news/news.html?in_article_id=511423&in_page_id=1770
1. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?2. Bible Query . com : ஆயிரக்கணக்கான பைபிள் கேள்விகளுக்கு பல தலைப்புகளில் பதில்கள்:(7300 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதில்கள்)
2. ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Allah Starts Christianity...by Accident)
3. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
4. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
5. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)
Isa Koran Home Page | Back - Tamil Muslims Rebuttal Index page |