குறள் 133 |
பால் | இயல் | அதிகாரம் | ||||||
காமத்துப்பால் | பாயிரம் இயல் |
|
|||||||
1321 | இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. | ||||||||
1322 | ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். | ||||||||
1323 | புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. | ||||||||
1324 | புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. | ||||||||
1325 | தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. | ||||||||
1326 | உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. | ||||||||
1327 | ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். | ||||||||
1328 | ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. | ||||||||
1329 | ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. | ||||||||
1330 | ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். |
Site developed and maintained by MURUGESAN OPENSSL TECHNICAL ENTERPRISE KNOWLEDGE TRANSFER SOLUTIONS © 2003 to 2056 All rights reserved. PrivacyPolicy |