குறள் 002 |
பால் | இயல் | அதிகாரம் | ||||||
அறத்துப்பால் | பாயிரம் இயல் |
|
|||||||
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | |||||||||
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | |||||||||
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி | |||||||||
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் | |||||||||
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை | |||||||||
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது | |||||||||
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் | |||||||||
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு | |||||||||
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் | |||||||||
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. |
Site developed and maintained by MURUGESAN OPENSSL TECHNICAL ENTERPRISE KNOWLEDGE TRANSFER SOLUTIONS © 2003 to 2056 All rights reserved. PrivacyPolicy |