1. குர்-ஆன் முரண்பாடுகள்2. முதலாவதாக அல்லா உருவாக்கியது எது? வானமா? அல்லது பூமியா?பதில்:ஒரு இடத்தில் குர்-ஆன் அல்லா வானத்தை முதலாவது உருவாக்கியதாகவும், பிறகு பூமியை உருவாக்கியதாகவும் சொல்கிறது. மற்றோர் இடத்தில் குர்-ஆன் இதையே மாற்றிச்சொல்கிறது. அ) முதலில் பூமி பிறகு வானம்: குர்-ஆன் 2:29 மற்றும் 41:9-12 வசனங்களில் குர்-ஆன் சொல்கிறது, முதலில் பூமி படைக்கப்பட்டது பிறகு வானம் படைக்கப்பட்டது.
குர்-ஆன் 2:29
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். குர்-ஆன் 2:29
குர்-ஆன் 41:9-12
"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயாமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.
ஆ) முதலிம் வானம் பிறகு பூமி: குர்-ஆன் 79:27-33 வசனங்களில், அல்லா முதலில் வானத்தைப் படைத்தான் என்றும் பிறகு பூமியை படைத்தான் என்றும் சொல்கிறது. இது முன் சொல்லப்பட்ட( 2:29, 41:9-12) வசனங்களுக்கு முரண்பட்டது.
குர்-ஆன்
79:27-33
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான் முடிவாக, வசனம் 2:29 ல், தெளிவாக உள்ளது, "பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டன்" என்று. முதலில் பூமியை படைத்துவிட்டு பின்பு அல்லா வானம் படைக்க முற்பட்டான்.
|
Isa Koran Home Page | Back - Contradictions Index |