முன்னுரை: நான் "சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!! " என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். இக்கட்டுரைக்கு ஒரு கிறிஸ்தவ சகோதரர் RAJ பதில் அளித்து இருந்தார், அதாவது, இவர் தன்னை கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் அளித்து இருந்தார். ஆனால், இவரது வரிகள் இவர் ஒரு முஸ்லீம் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. இனி இவரது பின்னூட்டத்தையும், அதற்கு என்னுடைய பதிலையும் காணலாம்.
முக்கியமாக நான் இக்கட்டுரை எழுதுவதின் நோக்கம், "கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள உண்மையை அலசுவதாகும். இந்த விஷயத்தில் பார்க்கும் போது, முஸ்லீம் அறிஞர்கள் (கவனிக்கவும், சாதாரண முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் அறிஞர்கள், கட்டுரை எழுதுபவர்கள் போன்றவர்கள்) பொய்யான தகவல்களை சில நேரங்களில் தெரிந்தே கொடுத்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி தெளிவை அல்லது உண்மையை தெரிவிக்கும் படி நான் தமிழ் முஸ்லீம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.
மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.
முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.
முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, "முகமது ஒரு அமைதியின் சொரூபம் " என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?
இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, "கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது". உணமையில், "மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் ". "இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)" அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை "கொலை செய்யும் சக்தி". இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.
முகமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.
ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.
கடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், "முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்".
In my very early response to this “Document”, I requested these 138 Muslim scholars to “Let Christians build a Church in Saudi Arabia. We can sit in Saudi Arabian Church and sort all the “Common Words”.
Isa Koran Home Page | Back |