இஸ்லாம் கல்வி என்ற தளத்தில் "நாம் யாரை வணங்க வேண்டும்" என்ற கட்டுரையை படித்தேன். இதை நெல்லை இப்னு கலாம் ரசூல் என்ற சகோதரர் எழுதியிருந்தார். இக்கட்டுரையில் அல்லாவைப் பற்றி பல விவரங்களை சொல்லியிருந்தார், அதே நேரத்தில், பைபிளைப் பற்றியும், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றியும் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.
நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள் எழுதியது :
இயேசுவைப் பின்பற்றுவோர் இயேசுவும் ஒரு தாயின் கருவில் சிசுவாய் இருந்தவரே என்ற உண்மையை மறந்தவர்களாகவும் புறக்கணிப்பவர்களாகவும் உள்ளனர். அவருக்கு உண்ண உணவு தேவைப்பட்டது. மற்றவர்களைப் போல் அவரும் பிறந்து வளர்ந்து மனிதராக வாழ வேண்டியிருந்தது. அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது:
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9) Source: http://www.islamkalvi.com/religions/to_whom_worship.htm
முஸ்லீம் அறிஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ பைபிளைப் பற்றி பல கட்டுரைகளை எழுதிவிடுகிறார்கள், அதற்காக அவர்கள் சரியான முறையான ஆராய்ச்சி கூட செய்வதில்லை. குறைந்தபட்சம், அவர்கள் எடுத்துக்காட்ட விரும்பும் வசனத்தின் பொருளை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல் எழுதிவிடுகிறார்கள். இப்படித் தான் இக்கட்டுரையிலும் வசனங்கள் எடுத்தாளப்பட்டுள்ளது.
இக்கட்டுரையை எழுதியவர்
கீழ்கண்ட விவரங்களைச் சொல்லவருகிறார்:
ஒரு செய்தியை சொல்வது தவறில்லை, அதற்கு சரியான வசன ஆதாரங்களை தரவேண்டும், அதற்கு பதிலாக சரியாக பொருந்தாத வசனத்தை ஆதாரமாக தரக்கூடாது, தன் வாதத்தை நிருபிப்பதற்காக பைபிள் வசனத்தை மாற்றக்கூடாது.
1. இறைவன் ஒருவனே
2. இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் 1 தீமோத்தேயு 2:5)
3. இயேசு தன்னை வணங்கக்கூடாது என்று இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் மத்தேயு 15:9)
1. இறைவன் ஒருவனே:
இறைவன் ஒருவனே என்பதை நிருபிப்பதற்கு பைபிளில் பல வசனங்கள் உள்ளது, ஆனால், நம் நண்பர் அவைகளை விட்டுவிட்டு, 1 தீமோத்தேயு 2:5ம் வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டார். இந்த வசனத்தை எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் தன் விருப்பப்படி பொருள் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களும் மூன்று வித்தியாசமான கடவுள்களை வணங்குவதில்லை, ஒரே கடவுளைத்தான் வணங்குகிறார்கள். ஒரே இறைவன் மூன்று விதங்களில் செயல்படுவதையே திரித்துவம் என்றுச் சொல்கிறோம். திரித்துவத்தை விளக்குவது இப்போதைக்கு இக்கட்டுரையின் நோக்கமல்ல. திரித்துவத்தை பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.
An Explanation of the Trinity for Muslims
THE TRINITY - From Biblical Reason and from the Old Testament
Trinity in the Old Testament and Dialogue with Jews and Muslims
The Trinity – More than 50 Articles
2. இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார். (இதற்காக அவர்
மேற்கோள் காட்டிய வசனம் 1 தீமோத்தேயு 2:5)
மாற்று மதவேதங்களின் வசனங்களை நாம் கட்டுரைகளில் பயன்படுத்தும் போது, அவைகளை அப்படியே மேற்கோள் காட்டவேண்டும், அதை மாற்றி நாம் எழுதக்கூடாது. இதை எல்லாரும் கவனித்தில் கொள்ளவேண்டும்.
2.1 பைபிள் வசனத்தை மாற்றிய நெல்லை இப்னு கலாம் ரசூல்
அவர்கள்:
கலாம் ரசூல் அவர்களே நீங்கள் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டும் போது, அதை பைபிளில் உள்ளது போலவே அதை கட்டுரைகளில் எழுதவேண்டுமே தவிர, அதை மாற்றி எழுதவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதோ நீங்கள் எழுதிய
வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
நீங்கள் "தேவன்"
என்ற வார்த்தையை "அல்லாஹ்" என்று எழுதுகிறீர்கள் .
1. முதலாவது பைபிளில் இருக்கும் வசனத்தை அப்படியே மேற்கோள் காட்டுங்கள். பிறகு அதன் கீழே "தேவன்" என்பவரை முஸ்லீம்கள் "அல்லாஹ்" என்றுச் சொல்கிறார்கள் என்று குறிப்பிடுங்கள்.
அல்லது,
2. தேவன் என்ற வார்த்தையின் பக்கத்தில் (அல்லாஹ்) என்று எழுதுங்கள். வசனத்தின் கீழே அடைப்பு குறிக்குள் உள்ள (அல்லாஹ்) என்ற வார்த்தையை எழுதியது நான் என்று எழுதுங்கள்.
மேலே சொன்ன இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள். இப்படி செய்தால், தான் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு, உங்கள் விருப்பப்படி சில வார்த்தைகளை எடுத்துவிடுகிறீர்கள், அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை எழுதுகிறீர்கள்.
உங்கள் குர்ஆனில் எவனாவது ஒருவன் "அல்லாஹ்" என்று வார்த்தை வரும் இடங்களில் "இயேசு" என்று எழுதி, குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினால், நீங்கள் சும்மா இருப்பீர்களா? இல்லை அல்லவா. அதே போலத்தான் மற்றவர்களுக்கும்.
யோவான்: 3:16. (அல்லாஹ்), தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி (அல்லாஹ்) தம்முடைய குமாரனை உலகத்தில்அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.மேலே உள்ளதை மறுபடியும் படித்துப்பாருங்கள், உலகம் இரட்சிக்கப்பட அல்லாஹ் இயேசுவை அனுப்பினாராம். உலக மக்கள் மீது அல்லா வைத்த அளவில்லாத அன்பை காட்டுவதற்கு இயேசுவை அல்லாஹ் அனுப்பினாராம்.
2.2 “இஸ்ரவேலர்களுக்கும்” என்ற வார்த்தையை நிழைத்த நெல்லை இப்னு
கலாம் ரசூல் அவர்கள்:
இஸ்லாம் என்னும் கண்ணாடியை போட்டுக்கொண்டு பைபிளை படித்தால், இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை மனதில் வைத்துக்கொண்டு பைபிளை படித்தால், இப்படித் தான் "பொதுவாக மனுஷர்கள்" என்று குறிப்பிட்டு இருப்பதை, இவர்கள் "இஸ்ரவேல் மக்களைத் தான்" இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று தவறாக புரிந்துக்கொள்கிறார்கள்.
இப்படித் தான் இஸ்லாம் கல்வி தள சகோதரரும் புரிந்துக்கொண்டுள்ளார்.
அவர் மேற்கோள் காட்டிய வசனத்தைப் பாருங்கள், "மனுஷருக்கும்" என்ற வார்த்தை தான் பைபிளில் வருகிறது, அதன் பக்கத்திலே இவர் "இஸ்ரவேலர்களுக்கும்" என்று எழுதியுள்ளார்.
கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம்:
ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே .
2.3 இவ்வசனத்தில் வரும் "மனுஷருக்கும்" என்ற வார்த்தை "இஸ்ரவேலர்களை
மட்டும் குறிக்காது" என்பதற்கான ஆதாரங்கள்:
இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டும்
தூதராக வந்தார் என்பதை நம்பும் இவர், "மனுஷருக்கும்" என்று
இவ்வசனம் குறிப்பிடுவது, இஸ்ரவேலர்களை
என்று தவறான புரிந்துக்கொண்டுள்ளார். இவரின் புரிந்துக்கொள்ளுதல் தவறானது என்பதற்கான ஆதாரங்கள்:
1. இக்கடிதத்தை எழுதியர் "அப்போஸ்தலர் பவுல் ஆவார்". இவர் இஸ்ரவேல் மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை சொல்ல அழைக்கப்பட்டவர் அல்ல, இவர் இஸ்ரவேல் அல்லாத மக்களுக்கு(Other Nations – புறஜாதிகளுக்கு) இயேசுவின் நற்செய்தியை சொல்ல அழைக்கப்பட்டவர். இந்த விவரத்தை இதே அதிகாரத்தில் 7ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
1 தீமோத்தேயு 2:7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
2. "எல்லா மனுஷருக்கும்" என்ற பொருள்
வரும் வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது:
கலாம் ரசூல் அவர்கள் குறிப்பிட்ட 5ம் வசனத்தின் முந்தைய வசனங்களையும் பிந்தைய வசனங்களையும் நாம் பார்க்கும் போது:
1 தீமோத்தேயு: 2:1 ல் --> எல்லா மனுஷருக்காகவும்
1 தீமோத்தேயு: 2:1 ல் --> அதிகாரமுள்ள யாவருக்காகவும்
1 தீமோத்தேயு: 2:4 ல் --> எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்
1 தீமோத்தேயு: 2:5 ல் --> மனுஷருக்கும்
1 தீமோத்தேயு: 2:6 ல் --> எல்லாரையும்
1 தீமோத்தேயு: 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
2.4 “மத்தியஸ்தர்” என்ற வார்த்தை “தூதராக” எப்படி
மாறியது:
நம்முடைய தமிழ் நாட்டு முஸ்லீம்கள் புத்திசாலிகள். தாங்கள்
குறிப்பிட நினைத்த வசனத்தில் "மத்தியஸ்தர்" என்ற
வார்த்தையை அப்படியே பயன்படுத்தினால், தாங்கள் சொல்லவந்த விவரத்தை சரியாகச்
சொல்லமுடியாது என்பதால், அந்த வார்த்தை இருந்த இடத்தில்
"தூதர் " என்று
எழுதிவிட்டார்கள். ஏனென்றால், தூதர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், ஆனால்,
மத்தியஸ்தர் என்றால் ஒருவர் தான், அதிலும் பைபிள்
இயேசுவையே சொல்கிறது. எனவே, இதனை மிகவும் அழகாக "தூதர்
" என்று மாற்றி எழுதிவிட்டார் நம் அருமை நண்பர் அவர்கள்.
கலாம்
ரசூல் அவர்கள் எழுதிய வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஆங்கிலத்தில் “Mediator” என்ற வார்த்தை அல்லது தமிழில் “மத்தியஸ்தர்” என்ற வார்த்தை எப்படி "தூதர் " என்று மாறியது.1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
இந்த கட்டுரையின்
ஆசிரியர் என்ன செய்தார் என்பதை பார்க்கலாம் :
1. இயேசு ஒரு தூதர் தான், அவர் இறைவன் இல்லை என்று காட்ட முடிவு செய்துள்ளார்.ஆங்கில மொழி பெயர்ப்பிலும் கூட, மத்தியஸ்தர் என்ற வார்த்தைக்கு "Mediator" என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் எங்கிருந்து இதை மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை.
2. இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதராக வந்தார் என்பதை காட்ட முடிவு செய்துள்ளார்.
3. அதனால், தான் “மனுஷருக்கும்” என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, இவராகவே "இஸ்ரவேலர்கள்" என்று மாற்றிவிட்டார்.
4. மத்தியஸ்தர் என்ற வார்த்தைக்கு பதிலாக "தூதர்" என்று மாற்றிவிட்டார் .
கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
கலாம் ரசூல் அவர்கள்:இந்த வசனத்தைப் பற்றியோ அல்லது இக்கட்டுரைப் பற்றியோ சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால், எனக்கு தெரிவிக்கவும், முடிந்த அளவிற்கு பதில் அளிக்க முயற்சி செய்வேன்.
அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
Isa Koran Home Page | Back - Islam Kalvi Rebuttals Index |