நான் என் மறுப்பை முழுவதுமாக, இதே கட்டுரையில் தந்துள்ளேன். அதற்கு முன்பாக ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.
இது தான் இஸ்லாமியர்களுக்கு கேள்விகள், இரண்டு
விதமாக வருகிறது என்று நண்பர் சொல்லியுள்ளார்.
1. அந்த தளத்திலேயே உள்ள கேள்விகேட்கும் பக்கத்தை
பயன்படுத்தி.
2. தனியாக மெயில்
மூலமாக கேள்விகள் வருகிறதாம்.
முதல் முறையில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை, கேள்விகள்
அப்படியே வரட்டும். அந்த மெயில் ஐடிக்களும் சில நேரங்களில் வாசகர்கள் தவறாகவே பதிவு
செய்வார்கள்.
கிறிஸ்தவத்தைப் பற்றிய ஒரு கேள்வி "மெயில்
e-mail " மூலமாக வந்ததாக நண்பர் நிஜாமுத்தீன் அவர்கள் எழுதினார்கள். தங்களுக்கு
மெயில் மூலமாக வந்த கேள்வி, Gmail Inbox --> Open Mail பக்கம் எப்படி இருக்கும்
என்று ஆதாரத்துடன் ஒரு படத்தையும் பதிவுசெய்தார்கள்.
இது தான் அந்த Gmail ஆதார
பக்கம்: இதில் சிகப்பு வட்டங்கள் நான் வரைந்தது.
//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இயேசுவின் உண்மை நிலைப் பற்றி நாம் எழுதி வருபவைக்கு மறுப்பு என்றப் பெயரில் சில இணையங்கள் சில கட்டுரைகளைப் பதித்தன. அதில் தமிழ் கிறிஸ்டியன் இணையத்தை நாம் நேரடி கருத்துப் பரிமாற்றக் களமாக எடுத்துக் கொள்ள எண்ணினோம். காரணம் பின்னூடல்கள் அதில் வருவதால். என்னவோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட மன்றம் மெளனம் சாதித்து விட்டது. மறுப்புக கட்டுரை எழுதுபவர் தனது நேரடி வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகின்றார். விவாத அழைப்பெல்லாம் தேவையில்லை. உங்கள் நிலையை நீங்கள் எழுதுங்கள், எங்கள் தரப்பை நாங்கள் எழுதுகிறோம் என்ற தோரணையில் எழுதியுள்ளார். எனவே அவரது நேரடி வலைப்பூவே நமது பதிலுக்குரியதாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.//
என் பதில்: என் வேண்டுகோலை ஏற்றுக்கொண்டதால், உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: முக்கியக் குறிப்பு: இணையத்தளத்தின் எழுத்துப் பணி என்பது எங்களின் முழு நேரப் பணியல்ல. நாங்கள் எங்கள் குடும்பங்களுக்காக அந்நிய மண்ணில் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். எங்கள் ஓய்வு நேரங்களை கூடுதலாக இதற்கும் பிற சமுதாய பணிகளுக்கும் நாங்கள் பயன்படுத்துகிறோம். எனவே பதில்களோ கட்டுரைகளோ பதிப்பதற்கு தாமதம் ஏற்படவே செய்யும். இந்த தாமதம் தவிர்க்க முடியாததாகும். //
என் பதில்: என்னால், உங்கள் நிலையை புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதுங்கள். நானும் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது. நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகிறேன்.
//ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இனி விஷயத்திற்கு வருவோம்.
இதுதான் இஸ்லாமிற்கு பதிலளிக்கிறேன் என்றப் பெயரில் அவரிடம் (அவர் என்று நாம் குறிப்பிடும் இடங்கள் அனைத்தும் மறுப்புக் கட்டுரை எழுதும் அந்த சகோதரரைக் குறிக்கும்) ஏற்பட்டுள்ள அவசரம் மற்றும் அவரது மனநிலையை முதலில் சுட்டிக் காட்டுவோம்.
அவசரம் - 1
இயேசுவின் வரலாறு முதலாவது மறுப்புக் கட்டுரையை அவர் இவ்வாறு ஆரம்பிக்கின்றார்.
'பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே, இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்'.
நம்மைப் பற்றி இப்படி குறிப்பிட்ட இதே சகோதரர் அவரது நான்காவது மறுப்புக் கட்டுரையில் 'நம் இஸ்லாமிய நண்பர் பைபிளின் விலாசம் சரியாக சொன்னதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரிடம் ஒரு பைபிள் உள்ளது என்று இப்போது நிச்சயமாகச் சொல்லலாம்'. என்று குறிப்பிடுகின்றார்.
இப்படியும் அப்படியுமாக அவர் எழுதியுள்ளது முரண்பாடு என்று சொல்லவில்லை. பதில் கொடுத்து விட வேண்டும் என்ற அவரது அவசரம் இந்தத் தவறை செய்துள்ளது.//
என் பதில்: இதில் தவறு
எங்குள்ளது.
இயேசுவின் வரலாறு
தொடர் 1ல், நீங்கள் கீழ் கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்:
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இதில் ஆகார் என்ற
இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக
பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும்
இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில்
ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர்
முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும்,
பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17
ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.
நீங்கள்
சொன்னவிவரங்கள் 12-17ம் அதிகாரங்கள் வரை அல்ல, 21ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான்
கீழ்கண்டவாறு சொன்னேன்.
அவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை
என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு
அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர். இது மட்டுமா,
ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம்
வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.
இந்த விவரங்கள் சரியானதா இல்லையா? இப்போதாவதுச் சொல்லுங்கள்
நண்பரே.
செய்த பிழையை ஒப்புக்கொள்ளாமல், படிப்பவர்களை
குழப்பபார்க்கிறீரோ?
இந்த இடத்தில் தவறு நேர்ந்துவிட்டது, அதிகாரங்களின் எண்கள்
இடம் மாறிவிட்டது என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, அவசரம் என்று என் மேல் குற்றம்
சொன்னால் எப்படி நண்பரே?
நான்காவது தொடரில் "பைபிள் விலாசம்" பற்றிய உம் செய்தியைப்
பற்றி:
நண்பரே,
நான் ஒரு கிறிஸ்தவன், இயேசுவை பின்பற்றுபவன். இதனால், என்னால் முடிந்த அளவிற்கு
நடுநிலையாக இருக்கவிரும்புகிறேன்.
முதல் தொடரில்,
நீர் தவறு செய்தீர், சுட்டிக்காட்டினேன். நான்காவது தொடரில் நீர் விலாசம் சரியாகச்
சொன்னீர், அதற்காக அதையும் என் மறுப்புக்கட்டுரையில் மெச்சிக்கொண்டேன் அல்லது என்
கருத்தை தெரிவித்தேன். நாம் என்ன எதிரிகளா? எப்போதும் தவறையே சுட்டிக்காட்டுவதற்கு.
சரி என்றால், சரி என்றுச் சொல்கிறேன். தவறு என்றால் தவறு என்றுச் சொல்கிறேன். என்
மறுப்புக்கட்டுரைகளில் ஒன்றை நீர் கவனிக்கவேண்டும், உன் கட்டுரைகளில் வரும் ஒவ்வொரு
வரியையும் நான் சேர்த்துள்ளேன். ஒரு வரியையும் நான் விட்டுவிடவில்லை. அப்படி
விடப்பட்டு இருந்தால், அது தவறுதலாக விடப்பட்டிருக்கும் என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சரியான விலாசம் சொன்னதை நான் குறிப்பிடவில்லை
என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள், " நான் தவறுதலாக அதிகாரத்தை மாற்றிச் சொன்னேன்,
அதை தன் மறுப்பில் குறிப்பிட்டார்கள், ஆனால், நான் சரியாக சொன்னவிவரங்களை,
சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் என்றுச் சொல்லி" என்மேல் குற்றம்
சாட்டமாட்டீர்கள்.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
அவசரம் - 2
இதுதான் இஸ்லாம் வெளியிட்ட கிறிஸ்த்தவ கேள்வி பதில் பகுதியில் வந்துள்ள மெயில் ஐடிகள் போலியானவை. அப்படி எந்த மெயில் ஐடியும் இல்லை. ஏனெனில் அந்த நான்கு மெயில் ஐடிகளையும் நான் இப்போதுதான் உருவாக்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது எழுத்தில்.
Qoute:
இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்?
இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன். இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.
a) [email protected]
b) [email protected]
c) [email protected]
d) [email protected]
(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)
என் பதில்: உண்மை தான். அன்று காலை நான் தான் இந்த மெயில் ஐடிக்களை உருவாக்கினேன்.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இப்படி எழுதிய இவரது கட்டுரைக்கு தரமான பின்னூடல்களும் வந்துள்ளன.
Qoute:
உமர், இதில் ஒன்றை கவனித்திற்களா அவர்கள் மின்-அஞ்சல் முகவரியை தரும் போது irvanm(at)reedifmaildotcom என்று தந்து இருப்பதை அதாவது SPAM மின்-அஞ்சல்களை தவர்ப்பதற்காக சிலர் இவ்வாறு((at) and dotcom) தருவதுண்டு. இல்லாத மின்-அஞ்சல் முகவரிக்கு, யாருங்க மின்-அஞ்சல் அனுப்பபோகிறார்கள்.
இவ்வளவு யோசித்தவர்கள் அந்த மின்-அஞ்சல் முகவரியை மறந்து விட்டார்கள். அது சரி இவர்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்பது தவறு தான்.
அப்ப இது தான் டூபாக்கூர் என்பதா? இப்பதாங்க டூபாக்கூர் என்றால் என்ன அர்த்தம் என்று புரிகிறது.
Last edited by vijayakumar on Fri Jul 13, 2007 2:12 pm.
இதேப் போன்று இன்னும் சில பின்னூடல்களும் தமிழ் கிறிஸ்டியன் தளத்தில் உள்ளன. இணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம். இதுதான் இஸ்லாம் தளத்தில் நேரடியாக கேள்வி எழுதும் வசதியை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 'எங்களுக்கு எழுத' என்றப் பகுதியை கிளிக் செய்தால் கீழே படத்தில் இருப்பது போன்று பக்கம் திறக்கும்.
இணையம் வருபவர்கள் நேரடியாக தங்கள் கேள்விகளைப் பதிப்பார்கள். இதில் கேட்கப்படும் பெயர், மின் அஞ்சல், நாடு என்று நாம் விபரம் கேட்டிருக்கிறோம். அவர்கள் பதிப்பவை எல்லாம் உண்மையா என்று எங்களால் கண்டறிய முடியாது. நாங்கள் மட்டுமல்ல பல்வேறு இணையங்களின் நிலையும் இதுதான். பல இணையங்களிலிருந்து சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யும் போது சம்பந்தப்பட்ட தளங்கள் மெயில் ஐடி கேட்கும். JUNK மெயிலுக்கு பயந்து பெரும்பாலானவர்கள் போலி மெயில் ஐடியையே பதிப்பார்கள். பல நேரங்களில் எங்கள் இணையத்திற்கு வந்து எழுதுபவர்கள் கூட போலி ஐடியை கொடுத்து விடுகின்றார்கள். உதாரணத்திற்கு 'கிறிஸ்த்தவம் கேள்வி பதில்' இதில் இடம் பெற்ற ஒரு மெயில் ஐடியை எடுத்துக் கொள்வோம். b) [email protected]
இந்த மெயில் ஐடி கிறிஸ்த்தவம் கேள்வி பதிலில் 424 வது கேள்வியில் இடம் பெற்றுள்ளது. இதே மெயில் ஐடியை கிறிஸ்த்தவ சகோதரர் 'ஜுலை 13ல் தாம் உருவாக்கியதாகக் கூறுகிறார். qoute:
திரு அறிஞன் அவர்களுக்கு என் (http://isakoran.blogspot.com) பதில்:
• இது தான் இஸ்லாம் தளத்தில் "பொய்யான ஐடிக்கள் வெளியிடப்பட்ட நாள்" Thursday, July 12, 2007 கிறிஸ்த்துவம் கேள்வி பதில்
• நான் ஐடிக்களை உருவாக்கி, பதில் தந்த நாள் : Friday, July 13, 2007
Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்
• இது தான் இஸ்லாம் "தள அனுமதி கேட்டு" இருந்த நாள்: Sunday, July 15, 2007
தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1
• அனுமதி தரப்படமாட்டாது என்றும், தேவையானால் பதில் தரவும், இல்லையானால் விட்டுவிடவும் என்றுச் சொல்லி, பதில் கொடுத்த நாள் : Monday, July 16, 2007 இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.
எந்த தளமும் பொறுப்பேற்காது, உங்களுக்கு விருப்பம் இருந்தால், பதில் தரவும் இல்லையானால் விட்டுவிடவும் என்று சொல்லி இன்றோடு 4 நாட்கள் ஆகிறது. இதுவரையில் பதில் இல்லை.
உண்மையில் உங்களிடம் பதில் இருந்தால்( பொய்யான ஐடிக்கள் பற்றி) உடனே அதை சொல்லவேண்டியது தானே,
ஏன் இத்தனை நாட்கள் காலதாமதம் செய்கிறீர்கள்?
மடியில் கனம் இல்லையானால் ஏன் வழியில் பயம் ?
இதே மெயில் ஐடியுடன் எங்களுக்கு எப்போது கேள்வி வந்தது தெரியுமா.. ஜுன் மாதம் 14ம் தேதி. அதாவது இவர் இதே மெயில் ஐடியை உருவாக்குவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே இதே மெயில் ஐடியிலிருந்து எங்களுக்கு கேள்வி வந்து விட்டது. என்ன ஆதாரம் என்கிறீர்களா... கீழுள்ள இமேஜை பாருங்கள்.
நாங்களே மெயில் ஐடியை போலியாக வெளியிட்டுள்ளோம் என்றும் அதை அவர்கள் கண்டு பிடித்து (அதிலும் கழிவறையில் உட்கார்ந்து படித்து ) தங்கள் சாதனையை மெச்சிக் கொள்பவர்கள், இப்போது இன்னும் பல மடங்கு தங்களை புகழ்ந்துக் கொள்ளட்டும். அதற்கு கழிவறைகள் துணை புரியட்டும்.
சம்பந்தப்பட்ட கிறிஸ்த்தவ சகோதரர் இதே மெயில் ஐடியை உருவாக்கி இருக்கட்டும் நாங்கள் அதை மறுக்கவில்லை. (அவரது திறமைக்கு ஒரு பாராட்டு) ஆனால் மெயில் ஐடி என்றாலே அது உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவரது நம்பிக்கைதான் குழந்தைத் தனமானது.
நாமாக மெயில் ஐடிகளை போலியாக வெளியிட்டு கேள்விகளைத் தொகுக்க வேண்டும் என்றால் இன்னும் ஆழமாக பல கேள்விகளைத் தொகுத்திருக்க முடியும் என்பதை அந்த சகோதரர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் என்றைக்கும் அதுபோன்று செய்ததில்லை.
என் பதில்: இதற்கான பதிலை இக்கட்டுரையின் ஆரம்பித்திலேயே தெரிவித்துவிட்டேன்.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: ஏற்கனவே ஒரு இஸ்லாமிய அறிஞரின் தவறை சுட்டிக் காட்டிய போது இதே போன்று id பிரச்சனையை நாங்கள் சந்தித்துள்ளோம். அதற்கான விரிவான விளக்கம் இதுதான் இஸ்லாம் 'விமர்சனப்பகுதி்'யில் உள்ளது. இதை சகோதரர் சாதிக் சமீபத்தில் தனது பின்னூடலில் கூட சொல்லியுள்ளார். எனவே இனிமேல் இணையத்தளம் வந்து எழுதும் கேள்விகள் பற்றிய இமெயில் மீது வைக்கப்படும் விமர்சனம் யாருடையதாக இருந்தாலும் அதை நாம் கண்டுக் கொள்ளப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.
என் பதில்: இப்படி தங்களுக்கு வரும் மெயில் ஐடிக்களை, அனுப்புகின்ற வாசகர்கள் மாற்றினால், ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அந்த மெயில் ஐடிக்களை நீங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளில் பதியும் போது [email protected] என்று பதியாமல், Spam க்காக xyzatgmail.com இப்படி பதிக்கிறீர்கள். கேள்விகளை அனுப்புகின்ற வாசகர்கள், இப்படி மாற்றி கட்டுரையில் எழுதுங்கள் என்றுச் சொல்கிறாரா? அப்படிச் சொன்னாலும், கேள்வி கேட்ட நான்கு வாசகர்களுமா இப்படி உங்களிடம் கேட்டுக்கொள்வார்கள்? (கிறிஸ்தவ பதிலில் நீங்கள் கொடுத்த கேள்விகளைப் பற்றிப் பேசுகின்றேன்).
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
//மறுப்பாளரின் மனநிலை.
மனம் திறந்த ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு நாம் அழைப்பு விட்டிருந்த நிலையில் அவர்களின் மன நிலையை அவர்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். அதையும் வாசகர்கள் பார்வைக்கு வைக்கின்றோம். Rukmani
Joined: Apr 02, 2007
Posts: 240 Posted: Fri Jul 13, 2007 1:13 pm Post subject:
ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?
இந்த விவாதத்தைப் பார்த்து நானே, என்ன இது புரியவில்லையே, ஒருவேளை ஆபிரகாம் பலி கொடுக்க நினைத்தது இஸ்மவேலாக கூட இருந்திருக்கலாம் என்று நினைத்தேன், நன்றி அண்ணா உங்கள் விளக்கத்திற்க்கு
_________________
Rukmani Shanmugam
ருக்குமணி என்ற சகோதரியின் பின்னூடலுக்கு உமர் என்றப் பெயரில் மறுப்பு எழுதும் அவர் அளித்துள்ள பதில். umar
Joined: Mar 16, 2007
Posts: 179 Posted: Fri Jul 13, 2007 2:27 pm Post subject:
ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,
ஒரு பேச்சுக்காக "பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும், இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை".
திரு உமர் அவர்களே... உங்கள் மனநிலையை நீங்கள் அறிவித்து விட்டீர்கள். 'நான் அப்படித்தான் என்று' நீங்கள் முடிவு செய்து விட்டப் பிறகு உங்களுக்காக கர்த்தரிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.
நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது உங்கள் விருப்பம். ஆனால் "இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை" என்றெல்லாம் எழுதி உங்கள் வடிகட்டிய அறியாமையை வெளியில் காட்டிக் கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் இதுதான் இஸ்லாத்திற்கு மறுப்பாக பல கட்டுரைகளை பதித்து விட்டீர்கள். உங்கள் அவசரத்திற்கு பாராட்டுகள். அதன் நிலவரங்களை நாம் தொடர்ந்து எழுதுவோம் பொருத்திருங்கள். வளரும் கர்த்தர் நாடட்டும்.//
என் பதில்: "ஒரு பேச்சுக்காக" என்று நான் சொன்னதை நீங்கள் இவ்வளவு தீவிரமாக சிந்திப்பீர்களானால், அதிலேயே நான் ஒரு உண்மையை உலகிற்கு சொல்லிவிட்டேனே, அதை பார்க்கவில்லையா?
Quote:
ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,
ஒரு
பேச்சுக்காக "பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு
வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும்,
இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை".
இதன் பொருள் என்ன தெரியுமா? நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதனால், குர்-ஆன் தவறு என்றுச் சொல்வதாக நினைக்கவேண்டாம். நான் ஒரு இந்துவாக இருந்தாலும், ஏன் நாத்திகனாக இருந்தாலும், அப்போது கூட நான் குர்-ஆனை திறந்த மனதுடன் அனுகினாலும், குர்-ஆன் மூலமாக ஒரு மனிதனை இறைவனிடம் சேர்க்கும் வழி அல்லாவிடம் இல்லை என்பது தான் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.
இப்படி எல்லா மறுப்புக்களையும் சேர்த்து ஒரு பதிலை நீங்கள் தருவதை விட்டுவிட்டு, இது வரை நான் கொடுத்த மறுப்புக்களுக்கு தனித் தனியாக பதிலைத் தாருங்கள். அப்போது தான் வாசகர்களுக்கு புரியும், உண்மை தெரியும்.
நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது:
1. இந்த மறுப்பின் முதலில் நான் முன்வைத்த கேள்விக்கான பதில் (ஜீமெயில் விவரங்கள்)
2. இயேசுவின் வரலாறு 1 முதல் 5 வரையிலான என் மறுப்பிற்கு ஒவ்வொன்றாக பதில்.
3. "இஸ்மவேலை
புகழும் பைபிள்" தொடருக்கான என் மறுப்பிற்கு உங்கள்
பதில்.